அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு: ம.பி.யில் பிரியங்கா காந்தி மீது வழக்கு!
Apr 20, 2026, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு: ம.பி.யில் பிரியங்கா காந்தி மீது வழக்கு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 13, 2023, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கமல்நாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்திற்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்த போது, பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆளும் பா.ஜ.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மேலும், கர்நாடகாவில் ஏற்கெனவே இருந்த பா.ஜ.க. ஆட்சி குறித்தும் விமர்சித்துப் பேசினார்.

இந்த சூழலில், பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அக்கடிதத்தில், மாநில அரசுக்கு 50 சதவிகித கமிஷன் வழங்கிய பிறகே, தங்களுக்கான நிதி வழங்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

பிரியங்கா காந்தியின் இப்பதிவையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் உட்பட பல்வேறு தலைவர்களும் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து, மாநில அரசு மற்றும் பா.ஜ.க.வின் புகழை கெடுக்கும் வகையில், தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் பதிவிட்டிருப்பதாகக் கூறி, இந்தூர் மாவட்ட பா.ஜ.க. சட்டப் பிரிவைச் சேர்ந்த நிமேஷ் பாடக் என்பவர், சம்யோகித் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், பிரியங்கா காந்தி, கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் பதிவுகள் குறித்த உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தனர்.

Tags: Indian National Congresspriyanka gandhiPriyanka Gandhi VadraINCmadhya pradesh congressmadhya pradesh
ShareTweetSendShare
Previous Post

இன்று சர்வதேச இடது கை பழக்கம் உடையவர்கள் தினம்!

Next Post

ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies