கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி
Jun 30, 2025, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
Aug 19, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துண்டுச் சீட்டு முதல்வர் ஸ்டாலின், மீனவ சகோதரர்களுக்காகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், முக்கடலும் சங்கமிக்கும், இலக்கியமும் ஆன்மீகமும் தழைத்தோங்கும் குமரி முனையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட மக்கள் கடலால் இனிதாக அமைந்தது.

மக்களைத் துன்புறுத்திய பாணாசுரன் எனும் தீயசக்தியை அழித்த பகவதி அம்மன் கோவில் கொடிமரக் கயிறு வழங்குவது மீனவர் சமுதாய சகோதரர்கள் குடும்பம்தான். ஜாதி மத பேதமற்ற ஆன்மீக பூமியிலுள்ள குமரி மக்களை, மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கிறது தீய சக்தி திமுக.

அய்யா வைகுண்டருக்கும், ஐயா நாராயண குருவுக்கும், ஞானம் கொடுத்த மண், அய்யா வைகுண்டரின் பக்தர்களால் புனிதமாகக் கருதப்படுவது இங்கிருக்கும் மருந்துவாழ்மலை. 131 ஆண்டுகளுக்கு முன், சுவாமி விவேகானந்தர் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற மண்ணில் நிற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மோடியின் முகவரி: கன்னியாகுமரி

விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மூலம் டிராக்டர் வாங்கி பலனடைந்த திரு அனந்தகோபால், 100 நாள் வேலைத் திட்டத்தில் பயன்பெற்ற திருமதி பொன்மணி, முத்ரா கடனுதவியின் மூலம் தொழில்முனைவோரான திரு சுப்பையன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்த திருமதி கட்டியம்மை, பிரதம மந்திரி உயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற்றுள்ள திரு மணிகண்டன், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ள செல்வி மகாலெட்சுமி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

மீனவர் நலனுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம். 1974ல் கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்து, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பேசாமல் இப்போது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கச்சத் தீவை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது, ஓடி வந்து ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார் ஸ்டாலின். தமிழ் மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சரவை முக்கியமாக இருந்தது திமுகவுக்கு. இப்போது அக்கறை இருப்பது போல் நடித்தால், ஏமாற மக்கள் தயாராக இல்லை.

பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மீனவர்களுக்காக புதிய துறையை உருவாக்கினார். மத்திய அரசின் மீனவ உட்கட்டமைப்பு நிதி மற்றும் மத்ஸய சம்பதா திட்டங்கள் மூலம், இதுவரை 1356 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலம் 1,84,457 மீனவ சகோதரர்கள் பயனடைந்துள்ளனர்.

மீனவர் நலனுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம். 1974ல் கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்து, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பேசாமல் இப்போது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கச்சத் தீவை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது, ஓடி வந்து ஸ்டிக்கர்… pic.twitter.com/5nWqaszbZ5

— K.Annamalai (@annamalai_k) August 18, 2023

துண்டுச் சீட்டு முதல்வர் ஸ்டாலின், மீனவ சகோதரர்களுக்காகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? கச்சத் தீவையும் மீனவ சமுதாய நலனையும் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது திமுகவுக்கு?

ஏற்கனவே தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் தலைமீது ஊழல் விசாரணைக் கத்தி தொங்குகிறது. தற்போது அவர் 4999 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார் என்று திமுக நிர்வாகியே கூறுகிறார்.

ஊழல் செய்வதும், மக்களை ஏமாற்றுவதும் தான் திமுக கூட்டணியின் வேலை. வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: annamalai bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Next Post

பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!

Related News

IAEA தலைவர் ஈரானுக்குள் நுழைய தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த எல்.முருகன்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் காவல்துறை தாக்கியது ஏன்? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

குரோஷியா தூக்கிலிட கூறிய ஈரான் – அமெரிக்கா கண்டனம்!

முதுமலை புலிகள் காப்பகம் : சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசிலாந்து : கனமழை வெள்ளம் – மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி : போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்!

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்!

பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி ரூ.100 கோடி பணமோசடி : 5 பேர் கைது!

இத்தாலி : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை : போலீசார் தீவிர கண்காணிப்பு!

கல்லணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு!

திருவள்ளூர் : மல்லர் கம்பம் விளையாடி அசத்திய மாணவர்கள்!

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies