கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி
Mar 27, 2026, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Aug 19, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துண்டுச் சீட்டு முதல்வர் ஸ்டாலின், மீனவ சகோதரர்களுக்காகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், முக்கடலும் சங்கமிக்கும், இலக்கியமும் ஆன்மீகமும் தழைத்தோங்கும் குமரி முனையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட மக்கள் கடலால் இனிதாக அமைந்தது.

மக்களைத் துன்புறுத்திய பாணாசுரன் எனும் தீயசக்தியை அழித்த பகவதி அம்மன் கோவில் கொடிமரக் கயிறு வழங்குவது மீனவர் சமுதாய சகோதரர்கள் குடும்பம்தான். ஜாதி மத பேதமற்ற ஆன்மீக பூமியிலுள்ள குமரி மக்களை, மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கிறது தீய சக்தி திமுக.

அய்யா வைகுண்டருக்கும், ஐயா நாராயண குருவுக்கும், ஞானம் கொடுத்த மண், அய்யா வைகுண்டரின் பக்தர்களால் புனிதமாகக் கருதப்படுவது இங்கிருக்கும் மருந்துவாழ்மலை. 131 ஆண்டுகளுக்கு முன், சுவாமி விவேகானந்தர் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற மண்ணில் நிற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மோடியின் முகவரி: கன்னியாகுமரி

விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மூலம் டிராக்டர் வாங்கி பலனடைந்த திரு அனந்தகோபால், 100 நாள் வேலைத் திட்டத்தில் பயன்பெற்ற திருமதி பொன்மணி, முத்ரா கடனுதவியின் மூலம் தொழில்முனைவோரான திரு சுப்பையன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்த திருமதி கட்டியம்மை, பிரதம மந்திரி உயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற்றுள்ள திரு மணிகண்டன், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ள செல்வி மகாலெட்சுமி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

மீனவர் நலனுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம். 1974ல் கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்து, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பேசாமல் இப்போது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கச்சத் தீவை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது, ஓடி வந்து ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார் ஸ்டாலின். தமிழ் மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சரவை முக்கியமாக இருந்தது திமுகவுக்கு. இப்போது அக்கறை இருப்பது போல் நடித்தால், ஏமாற மக்கள் தயாராக இல்லை.

பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மீனவர்களுக்காக புதிய துறையை உருவாக்கினார். மத்திய அரசின் மீனவ உட்கட்டமைப்பு நிதி மற்றும் மத்ஸய சம்பதா திட்டங்கள் மூலம், இதுவரை 1356 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலம் 1,84,457 மீனவ சகோதரர்கள் பயனடைந்துள்ளனர்.

மீனவர் நலனுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம். 1974ல் கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்து, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பேசாமல் இப்போது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கச்சத் தீவை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது, ஓடி வந்து ஸ்டிக்கர்… pic.twitter.com/5nWqaszbZ5

— K.Annamalai (@annamalai_k) August 18, 2023

துண்டுச் சீட்டு முதல்வர் ஸ்டாலின், மீனவ சகோதரர்களுக்காகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? கச்சத் தீவையும் மீனவ சமுதாய நலனையும் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது திமுகவுக்கு?

ஏற்கனவே தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் தலைமீது ஊழல் விசாரணைக் கத்தி தொங்குகிறது. தற்போது அவர் 4999 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார் என்று திமுக நிர்வாகியே கூறுகிறார்.

ஊழல் செய்வதும், மக்களை ஏமாற்றுவதும் தான் திமுக கூட்டணியின் வேலை. வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: annamalai bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Next Post

பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!

Related News

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

மேற்காசிய நிலவரம் – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

தற்போதைய நிலையில் தவெக – வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை – வேல்முருகன்

பிரதமர் மோடியுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies