இமாச்சல் மழை, வெள்ள பாதிப்பு: ஜெ.பி.நட்டா ஆய்வு!
Mar 26, 2026, 12:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சல் மழை, வெள்ள பாதிப்பு: ஜெ.பி.நட்டா ஆய்வு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆய்வு செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் உடனிருந்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், அங்கு கனமழை பெய்து வருகிறது. இது தவிர, திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெள்ளத்தில் 2,022 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதாகவும், 9,615 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, ஒட்டுமொத்த மாநிலத்தையும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, நாளை காலை (இன்று) ஜெ.பி.நட்டா இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் சிம்லாவின் அன்னடேல் ஹெலிபேட் தளத்திற்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி.நட்டா, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். இயற்கை பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பை எண்ணி மிகவும் வருந்துகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து, சிர்மௌர் மாவட்டத்திலுள்ள பௌண்டா சாஹிப் சென்று மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஜெ.பி. நட்டா, சிர்மௌரி தால், கச்சி தாங் ஆகிய கிராமங்களுக்கும் சென்று, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், நிலச்சரிவு மற்றும் கோவில் இடிந்து விழுந்த சிம்லாவின் சம்மர் ஹில் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, சிம்லா மற்றும் பிலாஸ்பூர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து விவாதித்தார்.

Tags: jp naddabjp nadda
ShareTweetSendShare
Previous Post

உ.பி. விடுதியில் பகீர்: 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல்!

Next Post

இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஜெர்மன் தூதரகம் பாராட்டியது!

Related News

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies