இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!
Jun 4, 2026, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 26, 2023, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விண்கலம் வெற்றியைத் தொடர்ந்து, இன்று காலை இஸ்ரோ சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பிய நிலையில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது. கடந்த 14-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய சந்திரயான்-3, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. தற்போது, லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுப் பணிகளை தொடங்கி இருக்கிறது.

அதேசமயம், சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியபோது பாரதப் பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்தார். எனினும், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பிரதமர் மோடி காணொளி வாயிலாகக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர் மோடி, அதன் தலைவர் சோம்நாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிலையில், கிரீஸ் நாட்டிலிருந்து திரும்பிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காக இன்று இஸ்ரோ சென்றார்.

பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு 

காலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான்-3 வெற்றியின்போது நான் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தேன். அதனால்தான் விஞ்ஞானிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை.

 

உங்களையும், சாதனை படைத்த விஞ்ஞானிகளையும் பார்ப்பதற்கு என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எனவேதான், நாடு திரும்பியதும் உடனடியாக விஞ்ஞானிகளை சந்திக்க வந்திருக்கிறேன். நான் விஞ்ஞானிகளை சந்திக்க வருவதால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். நான் பெங்களூரு வரும்போது முறைப்படியான நடைமுறை பின்பற்றினால் போதும் என்று கூறிவிட்டேன்” என்றார்.

தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பிரதமர் மோடி புறப்பட்டார். அப்போது, சாலையின் இருபுறமும் வழி நெடுகிலும் மக்கள் நின்றிருந்தனர். ஆகவே, காரில் நின்றபடியே மக்களைப் பார்த்து கை அசைத்தபடியே பிரதமர் மோடி சென்றார். பின்னர், இஸ்ரோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, சுமார் 1 மணி நேரம் இஸ்ரோவில் இருந்து விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, விஞ்ஞானிகள் அனைவரையும் பாராட்டினார்.

அப்போது, விண்கலம் செயல்பாட்டு பணிகளைப் பற்றி பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கிக் கூறினார். மேலும், சந்திரயான்-3 லேண்டரின் சிறிய மாதிரி வடிவத்தையும், லேண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்களையும், நிலவின் தென் துருவத்தில் விண்கலம் எங்கு இருக்கிறது என்பது குறித்த புகைப்படங்களையம் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர்.

 

Tags: PM Modifeatureisro moon mission chandrayaan 3pm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

வாழைத்தார்களின் விலை கிடுகிடு உயர்வு!

Next Post

சந்திரயான் நிலவில் தடம் பதித்த இடம்: “திரங்கா, சிவசக்தி” பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies