சந்திரயான் நிலவில் தடம் பதித்த இடம்: “திரங்கா, சிவசக்தி” பெயர் சூட்டிய பிரதமர் மோடி!
Sep 4, 2026, 10:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சந்திரயான் நிலவில் தடம் பதித்த இடம்: “திரங்கா, சிவசக்தி” பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 26, 2023, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தடம் பதித்த பகுதிக்கு “திரங்கா” என்றும், சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு “சிவசக்தி” என்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டி இருக்கிறார்.

சந்திரயான்-3 விண்கலம் வெற்றியைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் மோடி இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை பெங்களூருவிலுள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடி, “ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்” (விஞ்ஞானம் வாழ்க, ஆராய்ச்சி வாழ்க) என்று கோஷமிட்டார். தொடர்ந்து, வழி நெடுகிலும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், இஸ்ரோ ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில்,

“நான் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தாலும், எனது மனம் முழுவதும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம்தான் இருந்தது. இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவை தொட்ட தருணம் மறக்க முடியாதது. இந்திய விஞ்ஞானிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நிலவில் யாரும் செய்ய முடியாதச் சாதனையை நாம் அனைவரும் இணைந்து போராடி சாதித்திருக்கிறோம். சுதந்திர அடையாளமான அசோகச் சின்னம் நிலவில் பதிக்கப்பட்டு வருகிறது.

சந்திரயான்-3 வெற்றியைக் கண்டு எனது மனம் பூரித்துப்போய் இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஞ்ஞானிகளின் கடின உழைப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். நமது நாட்டின் பெருமையை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். சந்திரயான்-3 நிலவை ஆய்வு செய்ய புதிய வாசல்களை திறந்து விட்டிருக்கிறது. நிலவின் ரகசியங்களை நாம் கண்டறிவோம். இதன் மூலம் உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா தலைமை வகிக்கும்.

மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியப் பகுதியை “சிவசக்தி” என்று அழைப்போம். சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகம் என்பதால், சிவசக்தி என்று அழைப்பதே சாலச்சிறந்ததாகும். மேலும், இமயம் முதல் குமரி வரை இந்தியாவை இணைக்கும் தாரக மந்திரமாக சிவசக்தி உள்ளது. பூமி என்பது பெண் சக்தியின் அடையாளமாகத் திகழ்கிறது. அதேபோல, சந்திரயான்-2 நிலவில் தடம் பதித்த இடம் “திரங்கா” (மூவர்ணம்) என்று அழைக்கப்படும். எந்தத் தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டமே “திரங்கா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

அதோடு, சந்திரயான்-3 நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடுவோம். வரும் காலத்தில் விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். விண்வெளி தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. வானியல் ஆராய்ச்சியில் இந்தியா மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்திய இளைஞர்களை தட்டி எழுப்பி இருக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

Tags: PM Modipm modi latest speech
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Next Post

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் உறுதி!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies