நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீட் வினாத்தாள் கசிவு குறித்த அனைத்து வழக்குகளும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு முறையில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள், ஐஐடி நிபுணர்களின் உதவியுடன் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
















