மம்தா பானர்ஜியின் இல்லத்தில் நடந்த கூட்டத்தை 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்ததால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பது அம்பலமாக்கியுள்ளது.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. அன்றுமுதல் அக்கட்சிக்கு நாள்தோறும் ஏதேனும் சிக்கல் எழுந்து வரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட திரிணமுல் கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
திரிணமுல் காங்கிரஸ் விரைவில் அழிந்து விடும் என்று சொந்த கட்சி நிர்வாகிகளே வெளிப்படையாக கூறி வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்தில் எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
80 எம்எல்ஏக்களை கொண்ட திரிணாமுல் கட்சி கூட்டத்திற்கு 20 எம்எல்ஏக்கள் மட்டுமே வந்திருந்ததால் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து, மம்தா பானர்ஜி கூட்டத்தை ரத்து செய்ததாகவும், அங்கு வந்திருந்தவர்களுடன் மம்தா பானர்ஜி முறைசாரா ஆலோசனைகளை நடத்தியதாகவும் அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















