பங்காரு அடிகளார் மறைவு : தலைவர்கள் இரங்கல்!
Jun 15, 2026, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்காரு அடிகளார் மறைவு : தலைவர்கள் இரங்கல்!

பங்காரு அடிகளார் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “அம்மா பங்காரு அடிகளார் அவர்களின் புரட்சிகரமான சிந்தனைகளுக்காக மதிக்கிறேன். அவர் சன்னதியில் அனைத்து பெண்களையும் பூஜை செய்ய வைத்தார், அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தினார்.

அதனால் நான் ஒரு மாணவனாக இந்த கோவிலுக்கு மருத்துவத்தில் பங்கேற்க வந்தேன். நமது பிரதமர் அவரைச் சந்தித்தார், அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த இழப்பைத் தாங்கும் சக்தியைக் பக்தர்களுக்கு கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மேல் மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பங்காரு அடிகளார் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்தாக கூறினார். சாமானியர்களின் சாமி அடிகளார் என்றும், அவர் படுத்திருக்கும்போது கூட ஆசீர்வாதம் பண்ற மாதிரி இருக்கு என கூறினார். நேற்று கூட இங்கு வந்துட்டு தான் சென்றேன் எனவும், என்னால் இதை நம்பவே முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஸ்தாபகர் தவத்திரு.பங்காரு அடிகளார் காலமானார் என்கிற செய்தி அறிந்து வேதனையுற்றேன். அடிகளார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஓம் சக்தி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் என்றென்றும் போற்றத்தக்கது என தெரிவத்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் அம்மா பங்காரு அடிகளார் உடல் நலக் குறைவால் தனது 82-ஆம் வயதில் காலமானார், நம் ஆன்மீக பாரத தேசத்திற்கு இது பெரும் இழப்பு. அனைவருக்கும் ஆன்மீக குருவாய் இருந்து, அனைவரது வளர்ச்சிக்கும் குருவாய் வழிகாட்டியவர் அம்மா பங்காரு அடிகளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உள்ளத்திலும் அம்மா நீங்கா இடம் பெற்றுள்ளார்.

ஆன்மீகத்தில் மட்டுமின்றி கல்வி வேலை வாய்ப்பு என பல நற்பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியோர்களுக்காக அர்ப்பணித்துள்ளார். அம்மா அவர்களது ஆன்மீக சேவையை பாராட்டி 2019-ஆம் ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு அம்மா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. அவரது குடும்பத்தாருக்கும் பக்தர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tags: condolenceDeath of Bangaru Adikalar
ShareTweetSendShare
Previous Post

ஊழல் வாதிகளின் கூடாரமாக திமுக இருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

அட்டாரி வாகா எல்லை: 418 அடி உயரத்தில் பறக்கும் மூவர்ண கொடி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies