தொழிலாளர்கள் விவகாரம்: திமுக அரசு மீது கரு.நாகராஜன் பரபரப்பு புகார்!
Aug 24, 2026, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழிலாளர்கள் விவகாரம்: திமுக அரசு மீது கரு.நாகராஜன் பரபரப்பு புகார்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 06:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக அரசு துரோகம் செய்து வருகிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீட்டுத் திட்டம், நடைபாதை வணிகர்களுக்கான கடனுதவித்திட்டம், சிறு தொழில் செய்வோர்களுக்கான கடன் உதவித் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது போன்ற நல்ல திட்டங்களுக்குத் தமிழக அரசு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக, நலவாரியங்களுக்கு அளிக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்த நிலையில், தமிழக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

இதில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், விபி துரைசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கண்டன கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக பிரதமர் மோடி கிடைத்துள்ளார். மோடி பிரதமர் ஆன பின்புதான், உலக நாடுகளின் பார்வை பாரதத்தின் மீது விழுந்துள்ளது. பாரதத்தை மிகப் பெரிய வல்லரசு நாடாக மாற்றவேண்டும் என்று பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

அது மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அளவில்லாத திட்டங்களைக் கொடுத்துள்ளார்.

ஆனால், திமுக அரசு தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசு கொடுக்கும் நிதிகளை முறையாகத் திட்டங்களுக்குச் செலவு செய்யாமல் உள்ளது. இந்த போக்கை திமுக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: bjpKaru.Nagarajandmk fails
Share
Tweet
SendShare
Previous Post

பங்காரு அடிகளார் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்!

Next Post

இஸ்ரேல் பொருளாதாரம் : 1948 முதல் தற்போது வரை…!

Related News

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies