மிரட்டும் தேஜ், ஹாமன் புயல்கள்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Jun 15, 2026, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிரட்டும் தேஜ், ஹாமன் புயல்கள்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலை தேஜ் மற்றும் ஹாமன் புயல்கள் மிரட்டி வருகின்றன. இதனால், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும், புதிதாக யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 19-ம் தேதி காலை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அன்றையதினம் நள்ளிரவே தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது. பின்னர், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. இந்தப் புயலுக்கு ‘தேஜ்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ‘தேஜ்’ புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபிக்கடலில் ஏமன் நாட்டின் சகோத்ரா நகருக்கு 330 கி.மீ. கிழக்கு மற்றும் தென்கிழக்கேயும், ஓமன் நாட்டின் சலாலா நகருக்கு 690 கி.மீ. தெற்கு மற்றும் தென்கிழக்கேயும் மற்றும் ஏமன் நாட்டின் அல் கைடா நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இந்த தேஜ் புயல் இன்று மதியம் மேலும் வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதேபோல, வங்கக்கடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு மேற்கே மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது அந்தமான் போர்ட் பிளேயருக்கு வடக்கு மற்றும் வடமேற்கில் சுமார் 110 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் சாகர் தீவிற்கு தெற்கு மற்றும் தென்கிழக்கே 1,460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இந்த புயலுக்கு ஹாமன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த ஹாமன் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால், மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இது நாளை காலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு இருக்கிறது.

பின்னர், இப்புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வரும் 25-ம் தேதி அதிகாலையில் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே வங்கதேச கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதோடு, காற்றும் பலமாக வீசி வருதிறது. எனவே, ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறும், புதிதாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதனிடையே, புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில், எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை எண்ணூர் உட்பட கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மேலும், மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உயிரிழப்பைத் தடுப்பதற்கும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிழக்கு பிராந்திய கடலோரக் காவல் படை, தமிழகம், ஆந்திரா மாநிலங்களின் கடல்பகுதியில் ரோந்து சென்று வருகிறார்கள். மேலும், ஹெலிகாப்டர்களுடன் கூடிய கடலோர காவல் படை கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரபிக்கடல், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல்களைத் தொடர்ந்து இன்று முதல் 23-ம் தேதி வரை தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், 26-ம் தேதி வரை மத்திய மேற்கு பகுதிக்கும், 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வடக்கு பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Tags: Bay of BengalStormstrengthenArabian sea
ShareTweetSendShare
Previous Post

நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் – அமித்ஷாவுக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலை

Next Post

சத்தீஸ்கர் முதல்கட்டத் தேர்தல்: 253 பேர் வேட்புமனு ஏற்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies