இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
Apr 29, 2026, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அக்டோபர் 28-ஆம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களில், இரு படகுகளில் இருந்த 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அன்றிரவு 8:00 மணிக்கு மேலும் மூன்று படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ஒரே நாளில் 37 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், 23 பேரை மூன்று படகுகளுடன் மன்னார் கடற்படை முகாமிற்கும், 14 பேரை 2 படகுகளுடன் காங்கேசன்துறை முகாமிற்கும் கொண்டு சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களில் 23 பேரை நவம்பர் 9-ஆம் தேதி வரை வவுனியா சிறையிலும், 14 பேரை நவம்பர் 8-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையிலும் அடைக்க மன்னார் ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து இராமேஸ்வரத்தில் மீனவ சங்கத் தலைவர் சேசுராஜா தலைமையில் கூட்டம் நடந்தது. கைதான 37 மீனவர்கள் மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி கைதான 27 மீனவர்கள் என 64 பேரையும், படகுகளையும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். 2018-ஆம் ஆண்டு முதல் இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை மீட்க வேண்டும்.

இலங்கையில் மூழ்கி கிடக்கும் படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3-ஆம் தேதி மண்டபத்தில் இரயில் மறியல் மற்றும் நவம்பர் 6-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதம் நடத்துவது எனத் தீர்மானங்களை நிறைவேற்றினர்.

12 நாட்களுக்குப் பின்பு பணிநிறுத்தத்தைத் திரும்ப பெற்று அக்டோபர் 28-ஆம் தேதி இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், அவர்களிடம் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags: rameshwaram
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Next Post

ரஷ்ய விமான நிலையத்தை முற்றுகையிட்ட பாலஸ்தீனிய கும்பல் !

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies