50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!
Jul 29, 2026, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கௌசாம்பி மாவட்டத்தில் உஜ்ஜைனி கிராமத்தில் இருந்த 50 மீட்டர் உயரமுள்ள மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது.

வடிவேலு கிணறு காமெடி போல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது..?

மார்ச் மாதம் 31 ஆம் தேதி அன்று திருடப்பட்ட மொபைல் டவர் நவம்பர் 29 ஆம் தேதியன்று டெலிகாம் தொழில்நுட்ப வல்லுநரான ராஜேஷ் குமார் யாதவால் மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது என்ற செய்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த மார்ச் 31 ஆம் தேதி அன்று மொபைல் டவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், புகார் அளிக்க ஏன் எட்டு மாதங்கள் தாமதமானது என்று அதிகாரிகள் குழப்பமடைந்து விசாரித்து வருகிறனர்.

இந்த மொபைல் டவர் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைனி கிராமத்தில் சுமார் 10 டன் எடையும், 50 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மிகப்பெரிய மொபைல் டவர் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் புகாரில் மொபைல் டவர் மட்டுமின்றி,  மின் சாதனங்கள், மொபைல் டவர் அசெம்பிளியுடன் தொடர்புடைய பல்வேறு உபகரணங்களும் திருடப்பட்டுள்ளது. மேலும் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 8.5 லட்சம் ரூபாயாகும்.

தொழில்நுட்ப வல்லுநர் ராஜேஷ் குமார் யாதவ் அளித்த முறையான புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379 (திருட்டு) இன் கீழ் காவல்துறையால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரில் ஜனவரி 2023 யில் உஜ்ஜைனி கிராமத்தில் உள்ள உபித் உல்லா என்ற உள்ளூர்வாசியின் வயல்வெளியில் தனது நிறுவனம் மொபைல் டவரை நிறுவியதாக ராஜேஷ் தெரிவித்தார்.

மார்ச் 31 அன்று ராஜேஷ் ஆய்வு நடத்திய போது எவ்விதமான தடையமும் இல்லாமல் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் டவர் கட்டமைப்பு மாயமாகியுள்ளது என தெரிய வந்துள்ளது.

இதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரில் அரசு அதிகாரிகள் வேடமணிந்த திருடர்கள் 60 அடி இரும்புப் பாலத்தை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இந்த பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட உலோகம் ஸ்கிராப் இருப்பாக விற்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Tags: uttar pradeshtheftmobile tower
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி உண்டியல் காணிக்கை: 108.46 கோடி வசூல்!

Next Post

மிக்ஜாம் புயல்: பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies