நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகள்: நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி!
Jun 14, 2026, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகள்: நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 6, 2023, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் இன்று ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 ஆகிய இரு மசோதாக்களும் நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று இரு மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, இரு மசோதாக்களையும் மக்களவையில் தாக்கல் செய்ததும், மசோதா மீதான விவாதங்கள் நடைபெற்றது. விவாதங்களின் இறுதியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீர் பண்டிட்கள் இடம்பெயர்ந்தபோது சொந்த நாட்டில் அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏறக்குறைய 46,631 குடும்பங்கள் தங்கள் தாயகத்திற்குள் இடம்பெயர்ந்தனர். இந்த மசோதா அவர்களின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உரிமைகளை வழங்குவதற்கும், மரியாதையுடன் உரிமைகளை வழங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் மிகப் பெரிய தீங்கு விளைவித்திருக்கிறது. மாறாக, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி இடைவிடாத முயற்சிகள் மேற்கொண்டார். எனவே, நலிவடைந்த மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு பதிலாக, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்வது முக்கியம்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் இதுவரை 45,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் தீவிரவாத சூழலை ஒழிப்பதிலேயே எங்களது முழு கவனமும் இருக்கும். 2024-ல் மோடி அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறேன். 2026-ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவம் நடக்காது என்று நம்புகிறேன். இந்தியாவின் எல்லைக்குள் எந்தவொரு முடிவையும் எடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பானதாக மாறினால், முழு மாநில அந்தஸ்தை வழங்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கும், முக்கியமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டு, பின்னர் காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றார். நேரு மட்டும் சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இது ஒரு வரலாற்றுத் தவறு” என்றார்.

Tags: ParliamentAmit shaJammu Kashmir Bills
ShareTweetSendShare
Previous Post

மூன்று மாநிலங்களிலும் ரெட்டை எஞ்சின் அரசு அமைந்தது போல் தமிழகத்திலும் அமைய வேண்டும்!

Next Post

முக்கியத் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies