எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் - தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு!
Jul 29, 2026, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எண்ணூரில் மழை நீரில் எண்ணெய் கழிவுகள் கலந்தது தொடர்பாக, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

பெரும்  ழையைக் காரணம் காட்டி, சென்னை எண்ணூர் கழிமுகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் சத்தமின்றித் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மழை வெள்ளத்தின் போதும் கழிவுகளை மழை நீரில் திறந்து விடுவதைச் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதைக் கண்டும் காணாமல் இருக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு வெட்டவேண்டியதை வெட்டிவிட்டு, சத்தமில்லாமல் ரசாயன கழிவுகளை வெளியேற்றியுள்ளனர்.

இந்த பிரச்சனை சென்னை எண்ணூருக்கு புதிது. ஆனால், கரூர் கடலூர், தூத்துக்குடி, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மற்ற தொழிற்சாலை பகுதிகளில் இது சாதாரணம். காரணம், இது அடிக்கடி நடப்பது வழக்கம்.

ஏற்கனவே, வெள்ள நீர் வடியாமல் வீட்டிற்குள் புகுந்து அவதிபட்டுக் கொண்டிருக்கும் சென்னை எண்ணூர் பகுதி மக்களின் வீட்டிற்குள் தற்போது எண்ணெய் கழிவுகள் புகுந்து இருப்பது மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது. திமுக அரசு எந்த அளவுக்குச் செயல் இழந்துள்ளது என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி இருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை உரிமையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அதேவேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தொழிற்சாலைகளின் செலவில், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்து தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை அந்த நிறுவனமோ அல்லது தமிழக அரசோ உடனே வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், போராட்டம் தவிர்க்க முடியாது என்றும் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், தற்போது, தாமாக முன்வந்து விசாரிக்கிறது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம். இது தொடர்பான விசாரணை நாளை காலை பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags: Oil spills in EnnoreSouthern Regional Green Tribunalsuo motu case
ShareTweetSendShare
Previous Post

2024- ல் பாரத் டெக்ஸ் என்ற உலக மகா ஜவுளி நிகழ்வு!

Next Post

தனியார் பள்ளிகள் திறக்க தடை – தமிழக அரசு புதிய உத்தரவு!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies