5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!
Apr 29, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகளை, மனிதாபிமானம் இல்லாமல் பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமார் 5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாடு வெளியேற்றி உள்ளது.
இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும் உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் உள்நாட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி (Sarfraz Bugti) கூறியதாவது: கடந்த 2 மாதங்களில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4.82 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும், உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் உள்நாட்டினர் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.

கடந்த 1979-89-ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததில் இருந்து, பாகிஸ்தான் சுமார் 1.7 மில்லியன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. எனினும், சமீப காலமாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், ஆப்கானிஸ்தான் அகதிகள், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை அடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் தற்போது கூறியுள்ளாா்.

Tags: afganistan
ShareTweetSendShare
Previous Post

பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி

Next Post

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies