ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் - இந்து முன்னணி அறிவிப்பு!
Jul 29, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் நடத்துவதா? என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் கருவறை அருகே கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு பெருமாளை வணங்கியுள்ளார். அவர் சபரிமலை செல்வதற்கு ஐயப்ப விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளார்.

கோவிந்தா நாமம் எழுப்புவதைக் கண்ட அறநிலையத் துறை ஊழியர்கள் அவரோடு வாக்குவாதம் செய்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரத்தம் சொட்டச்சொட்ட கோவிலுக்குள்ளேயே பக்தர் தரையில் அமர்ந்து கதறி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் பக்தியும் இல்லை, பக்தர்கள் மீது பரிவும் கிடையாது, ஆகம விதிகளும், அடிப்படையும் தெரியாது.

வழிபாட்டுத்தலத்திற்குள் இதுபோல அவமதிப்பதும், அடித்து அச்சுறுத்துவதும் உலகத்தில் எந்த மூலையிலும் பார்க்க முடியாத காட்சியாகும். பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் எனும் பாரதியின் கூற்று நூறு சதவீதம் திராவிட மாடல் ஆட்சிக்கு பொருந்தும்.

திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதைத் தடுப்பதற்கு அநியாயக் கட்டணம் வசூலித்தார்கள். அப்பட்டமாக ஆகம விதிகளை மீறினார்கள். மடாதிபதிகளைத் துறவியர்களை அவமதித்தார்கள்.

தற்போது பழனி திருச்செந்தூரில் தொடங்கி ஸ்ரீரங்கம் வரை பக்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்குக் காரணமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பக்தருக்கு உரிய இழப்பீடு வழங்கி சகல மரியாதையோடு சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் பக்தர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Govindasrirangamhindu munanisrirangam templedevotee attacked
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – மத்திய அரசு முக்கிய முடிவு!

Next Post

உடைந்த ஏரி: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. விவசாயிகள் வேதனை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies