இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!
Mar 19, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில், செயலிகள் மூலம் கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் குறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறைக்கான இணையமைச்சா் ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், “இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ஒழுங்காற்று விதிகள், பிற துறை ரீதியிலான விதிமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வணிக நடவடிக்கைகளை இந்தியாவில் தொடங்க முடியும்.

நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 380-ன் கீழ் இந்நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் நிறுவனங்கள் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில், சீனாவைச் சோ்ந்த 53 நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கான தரவுகள் இல்லை.

மேலும், நிறுவனங்கள் சட்டத்தில் ‘போலி நிறுவனங்கள்’ குறித்த வரையறை இல்லை. இருப்பினும், பதிவு செய்த நிறுவனம் ஓராண்டுக்குள் தனது வணிக செயல்பாட்டைத் தொடங்கவில்லை என்றாலோ, அல்லது தொடா்ச்சியாக இரு நிதியாண்டுகளுக்கு எவ்வித வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றாலோ, நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 248 (1)-ன் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அந்நிறுவனத்தின் பதிவை நிறுவனங்கள் பதிவாளா் ரத்து செய்ய முடியும்.

மேலும், இத்தகைய காலத்தில் செயல்படாத நிறுவனம் என்று அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கத் தவறினாலும் அந்நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். கடந்த 2021 ஏப்ரல் 4 முதல் கடந்த மாதம் 28-ம் தேதி வரை 1,55,217 நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: ParliamentchinaCompanies
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் பலி!

Next Post

புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்! – மத்திய அரசு

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies