இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!
Aug 16, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 06:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில், செயலிகள் மூலம் கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் குறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறைக்கான இணையமைச்சா் ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், “இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ஒழுங்காற்று விதிகள், பிற துறை ரீதியிலான விதிமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வணிக நடவடிக்கைகளை இந்தியாவில் தொடங்க முடியும்.

நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 380-ன் கீழ் இந்நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் நிறுவனங்கள் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில், சீனாவைச் சோ்ந்த 53 நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கான தரவுகள் இல்லை.

மேலும், நிறுவனங்கள் சட்டத்தில் ‘போலி நிறுவனங்கள்’ குறித்த வரையறை இல்லை. இருப்பினும், பதிவு செய்த நிறுவனம் ஓராண்டுக்குள் தனது வணிக செயல்பாட்டைத் தொடங்கவில்லை என்றாலோ, அல்லது தொடா்ச்சியாக இரு நிதியாண்டுகளுக்கு எவ்வித வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றாலோ, நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 248 (1)-ன் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அந்நிறுவனத்தின் பதிவை நிறுவனங்கள் பதிவாளா் ரத்து செய்ய முடியும்.

மேலும், இத்தகைய காலத்தில் செயல்படாத நிறுவனம் என்று அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கத் தவறினாலும் அந்நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். கடந்த 2021 ஏப்ரல் 4 முதல் கடந்த மாதம் 28-ம் தேதி வரை 1,55,217 நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: ParliamentchinaCompanies
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் பலி!

Next Post

புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்! – மத்திய அரசு

Related News

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies