அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: இராமஜோதி எடுத்து வரும் இஸ்லாமிய பெண்கள்!
Aug 5, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: இராமஜோதி எடுத்து வரும் இஸ்லாமிய பெண்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இராம பக்தர்கள் பலரும், வைர நெக்லஸ், தங்க காலணிகள், பூட்டு, அகர்பத்தி என தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். அதோடு, நேபாளில் இருந்து சீதா தேவிக்கு சீர்வரிசை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

எல்லாவற்றும் மேலாக, இஸ்லாமியர்கள் பலரும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக நன்கொடை வழங்குவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்லாமிய பெண்கள் இருவர் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர்தான், ‛கடவுள் இராமர் நமது முன்னோர். இந்தியர்களின் டி.என்.ஏ.வும் ஒன்றுதான்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.

இதற்காக இருவரும் இன்று அயோத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களின் பயணத்தை பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக்தாஸ் மற்றும் ஓம் சவுத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இராமஜோதியை நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோரிடம் ஷம்பு தேச்சாரியார் ஒப்படைத்தார்.

இருவரும் இராமஜோதியுடன் நாளை காசியை வந்தடைகின்றனர். வரும்போது அயோத்தி மண் மற்றும் சரயு நதியின் புனித நீரையும் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து “ராமபந்த்” அமைப்பின் தலைவர் ராஜிவ் ஸ்ரீகுருஜி கூறுகையில், “நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர் அயோத்தியில் இருந்து இராமஜோதியை கொண்டு வருவார்கள். ஜவுன்பூர் முதல் வாரணாசி வரை, பல்வேறு இடங்களில் இராமஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். நாளை, சுபாஷ் பவன் என்ற இடத்தில் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இராமஜோதியை வரவேற்பார்கள்” என்றார்.

Tags: Ram TempleAyodyaMuslim LadiesRamajothi
Share
Tweet
SendShare
Previous Post

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 126-ஆக உயர்வு!

Next Post

டேவிட் வார்னருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து !

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies