அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: இராமஜோதி எடுத்து வரும் இஸ்லாமிய பெண்கள்!
Jun 16, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: இராமஜோதி எடுத்து வரும் இஸ்லாமிய பெண்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இராம பக்தர்கள் பலரும், வைர நெக்லஸ், தங்க காலணிகள், பூட்டு, அகர்பத்தி என தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். அதோடு, நேபாளில் இருந்து சீதா தேவிக்கு சீர்வரிசை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

எல்லாவற்றும் மேலாக, இஸ்லாமியர்கள் பலரும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக நன்கொடை வழங்குவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்லாமிய பெண்கள் இருவர் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர்தான், ‛கடவுள் இராமர் நமது முன்னோர். இந்தியர்களின் டி.என்.ஏ.வும் ஒன்றுதான்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.

இதற்காக இருவரும் இன்று அயோத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களின் பயணத்தை பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக்தாஸ் மற்றும் ஓம் சவுத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இராமஜோதியை நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோரிடம் ஷம்பு தேச்சாரியார் ஒப்படைத்தார்.

இருவரும் இராமஜோதியுடன் நாளை காசியை வந்தடைகின்றனர். வரும்போது அயோத்தி மண் மற்றும் சரயு நதியின் புனித நீரையும் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து “ராமபந்த்” அமைப்பின் தலைவர் ராஜிவ் ஸ்ரீகுருஜி கூறுகையில், “நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர் அயோத்தியில் இருந்து இராமஜோதியை கொண்டு வருவார்கள். ஜவுன்பூர் முதல் வாரணாசி வரை, பல்வேறு இடங்களில் இராமஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். நாளை, சுபாஷ் பவன் என்ற இடத்தில் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இராமஜோதியை வரவேற்பார்கள்” என்றார்.

Tags: AyodyaMuslim LadiesRamajothiRam Temple
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 126-ஆக உயர்வு!

Next Post

டேவிட் வார்னருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து !

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies