உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
Apr 29, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி  நகர் மகாத்மாமந்திரில்  நடைபெறுகிறது. ‘துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாடு’ என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.இந்த மாநாடு 12ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதற்காக விமான மூலம் பிரதமர் மோடி அகமதாபாத் சென்றார். அவரை குஜராத் ஆளுநர்  ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மோடி தனது இரண்டு நாள் பயணத்தின் போது, உலகத் தலைவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்திக்கிறார்.

ஜனவரி 10ஆம் தேதி காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில்  குஜராத் குளோபல் உச்சி மாநாடு 2024ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.அதன்பிறகு, உலகின் முன்னணி  நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்திக்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், சற்று முன் அகமதாபாத்தில் தரையிறங்கினேன். அடுத்த இரண்டு நாட்களில், குஜராத் உச்சி மாநாடு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.  இந்த உச்சி மாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களுடன் இணைவது  மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

என் சகோதரன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வருகை  மிகவும் சிறப்பு வாய்ந்தது.குஜராத் உச்சி மாநாட்டுடன் எனக்கு மிக  நெருக்கமான தொடர்பு உள்ளது. இந்த தளம் குஜராத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு  பங்களித்தது மற்றும் பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கியது என்பதைக் கண்டு  மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: PM ModigujaratGandhi NagarAhmedabadVibrant Gujarat Summit
ShareTweetSendShare
Previous Post

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! – பியூஷ் கோயல்

Next Post

திமுக, தமிழகத்துக்குக் கொண்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஐந்து மட்டுமே! – அண்ணாமலை

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies