பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் – தி.மு.க. எம்.எல்.ஏ கருணாநிதி கைது?
Jul 28, 2026, 10:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் – தி.மு.க. எம்.எல்.ஏ கருணாநிதி கைது?

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார்.

கடந்த ஆண்டு இவரது வீட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த பட்டியலினைச் சேர்ந்த சிறுமி வேலை செய்து வந்துள்ளார்.

அந்த சிறுமியை மேற்படிப்பு படிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் சென்னை அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆன்டோவின் மனைவி மெர்லின், அந்தச் சிறுமியை துன்புறுத்தி உள்ளார்.

சிறுமியை நிர்வாணப்படுத்துவது, உடலில் சூடு போடுவது, கரண்டியால் மார்பில் அடிப்பது, காயங்கள் ஏற்படுத்துவது, சாதி ரீதியாக இழிவாகப் பேசுவது, என மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளார். அவ்வப்போது ஆண்டோவும் அந்த சிறுமியை தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அந்த பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, அவரது மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோருக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோர் மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை பல்லாவரம் திமுகச் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, அவரது மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் உள்ளிட்டோர் மீது நீலாங்கரை மகளிர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதாவது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை பல்லாவரம் திமுகச் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, அவரது மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் உள்ளிட்டோர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: dmk mla arrest
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் வெற்றி!

Next Post

அயோத்தி இராம் லல்லா தரிசனம்: இன்றே கடைசி நாள்… இனி 22-ம் தேதிதான்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies