ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.10,000 கோடி செலவாகும்: தேர்தல் ஆணையம் தகவல்!
Sep 18, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.10,000 கோடி செலவாகும்: தேர்தல் ஆணையம் தகவல்!

Web Desk by Web Desk
Jan 21, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டால், புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொள்முதல் செய்வதற்காக மட்டும் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தோ்தல் ஆணையம் கணக்கிட்டிருக்கிறது.

இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே, இதற்கான சாத்தியக் கூறுகள் தொடா்பாக ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உட்பட 7 உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இக்குழுவினர் சட்ட ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, குழுவினர் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்ப்பு சீட்டுக் கருவிகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை குறித்தும், அதற்கான செலவினம் குறித்தும் மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு விளக்கம் கேட்டிருந்தது.

இதற்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய பதில் கடிதத்தின் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.  அதில், “வாக்குப்பதிவு அலகு, கட்டுப்பாட்டு அலகு மற்றும் வாக்கு சரிபார்ப்பு சீட்டு கருவி ஆகியவை உள்ளடங்கிய ஒரு வாக்குப்பதிவு இயந்திரத் தொகுப்பை 15 ஆண்டுகள் பயன்படுத்த முடியும்.

அதன்படி பார்த்தால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 3 தேர்தல்களுக்கு ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 11.80 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

பேரவைகளுக்கும் சேர்த்து தோ்தல் நடத்தினால், ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 2 வாக்குப் பதிவு இயந்திர தொகுப்புகள் தேவைப்படும். வாக்குப் பதிவு நடைமுறையின் பல்வேறு நிலைகளின்போது இயந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டால், அவற்றை மாற்றுவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூடுதல் இயந்திரங்களை இருப்பு வைக்க வேண்டும்.

அந்த அடிப்படையில், ஒரே நேர தேர்தலுக்கு 46.75 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 33.63 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள், 36.62 லட்சம் வாக்கு சரிபார்ப்பு சீட்டு கருவிகள் தேவைப்படும். இதன்படி பார்த்தால், புதிய இயந்திரங்கள் கொள்முதலுக்காக 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10,000 கோடி ரூபாய் தேவைப்படும்.

இது தவிர, கூடுதல் எண்ணிக்கையில் தேர்தல் ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அறை வசதிகள், கூடுதல் வாகனங்கள் அவசியம். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் தயாரிப்பு உட்பட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டால், 2029-ம் ஆண்டில்தான் ஒரே நேர தேர்தலை நடத்த முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அதன்படி, நாடாளுமன்ற அவைகளின் பதவிக்காலம் தொடா்பான 83-வது பிரிவு, குடியரசுத் தலைவரால் மக்களவை கலைக்கப்படுவது தொடா்பான 85-வது பிரிவு, மாநிலப் பேரவைகளின் பதவிக்காலம் தொடர்பான 172-வது பிரிவு, மாநிலப் பேரவைகள் கலைக்கப்படுவது தொடர்பான 174-வது பிரிவு, மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான 356-வது பிரிவு ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அதேபோல, கட்சித் தாவல் காரணமாக மக்கள் பிரதிநிதிகளைத் தகுதி நீக்கம் செய்வதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையிலும் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று தோ்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 1951 முதல் 1967-ம் ஆண்டு வரை மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு பெரும்பாலும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.

Tags: Election commissionone nation one election10000 crores
ShareTweetSendShare
Previous Post

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து!

Next Post

மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!

Related News

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies