அயோத்தி இராமர் கோவில்: முதல் நாளில் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!
Apr 29, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில்: முதல் நாளில் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 22-ம் தேதி நிறைவடைந்த நிலையில், பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழாக்கள் நடைபெற்றன.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். விழாவில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.

நேற்று அதிகாலை 3 மணி முதலே அயோத்தி இராமர் கோவிலில் இராம பக்தர்கள் குவிந்தனர். இதனால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. உடனே, பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்ய விரைந்தனர்.

பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, போலீஸார் கோவிலில் தடுப்புகளை அமைந்திருந்தனர். எனினும், தடுப்புகளை உடைத்துக் கொண்டு பக்தர்கள் முண்டியடித்துச் சென்றனர். காலை 6 மணிக்குத் தொடங்கிய தரிசனம், இரவு 10 மணி வரை நீடித்தது.

அந்த வகையில், முதல் நாளில் மட்டும் 5 லட்சம் பேர் குழந்தை இராமரை தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அனைத்து பக்கதர்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆகவே, பக்தர்கள் அமைதி காத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

Tags: Ram TempleAyodyaFirst Day5 lakhs devotees
ShareTweetSendShare
Previous Post

ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது! – பிரதமர் மோடி மகிழ்ச்சி!

Next Post

நீலகிரி: அவலாஞ்சியில் 0 டிகிரி வெப்பநிலை பதிவு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies