சொந்த மண்ணில் பவதாரணியின் உடல் – உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி!
Apr 29, 2026, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொந்த மண்ணில் பவதாரணியின் உடல் – உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் வைக்கப்பட்டுள்ள, மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடலுக்கு, உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி, உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார். , கொழும்பிலிருந்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது உடல், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பவதாரிணியின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் நேரில்  அஞ்சலி செலுத்தினர். மேலும், ஏராளமான பொதுமக்கள் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பவதாரிணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பவதாரணியின் உடலுக்கு உறவினர்களும், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பவதாரணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, இளையராஜாவின் மகன்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினர் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே, தனது மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, இளையராஜா விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை வந்த இளையராஜா சாலை மார்க்கமாக பண்ணையப்புரம் சென்றார்.

இதன் பின், லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Tags: Yuvanchennai airportmadurai airportilayarajaBhavadharani's body in her own landkarthick raja
ShareTweetSendShare
Previous Post

டைவ் அடித்து வெற்றியைக் கொண்டாடும் வீரர் : வைரலாகும் வீடியோ !

Next Post

பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி: ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies