65 வயது மூதாட்டி பாலியல் சித்தரவதை - தென்காசி அருகே பயங்கரம்!
Jul 28, 2026, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

65 வயது மூதாட்டி பாலியல் சித்தரவதை – தென்காசி அருகே பயங்கரம்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 65 வயது மூதாட்டி மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் முயற்சியில் கொலை நடந்ததாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் பழனி ஆண்டவர் கோவிலின் பின்புறம் ஓட்டு வீட்டில் வசித்து 65 வயமு மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார்.

மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள கிராமமான ஆவுடையானூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவ்வபோது மூதாட்டியை அவரது மகன் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

மூதாட்டி முப்புடாதி பீடி சுற்றும் வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூதாட்டி முப்புடாதி மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்ததை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி பர்ணபாஸ், தென்காசி ஏடிஎஸ்பி ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து மூதாட்டி இறந்து கிடந்ததை பார்த்த பொழுது மூதாட்டியின் உடலில் ஆடை இன்றியும் முகத்தை மட்டும் சாணத்திற்குள் திணித்தபடியும் இறந்து கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆடை இன்றி முகம் சாணத்திற்குள் திணிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததால் யாரேனும் மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்று கொலை செய்தனரா? என்கிற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு திப்பணம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் ராமர் (72) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து விசாரனை செய்ததில் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் , மூதாட்டி மறுத்து ஆவேசமாக திட்டியதால் , ஆத்திரத்தில் கொலை செய்து சானம் கொட்டப்பட்ட குழியில் கொண்டு வந்து போட்டதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: ArrestmurderBhavoorchatramTenkasi districtMuthathi Mupputadi
ShareTweetSendShare
Previous Post

அரசு டாஸ்மாக் கடையில் மது குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி – குடும்பத்தினர் கதறல்!

Next Post

கென்யாவில் வெடித்து சிதறிய எரிவாயு வாகனம் – 3 பேர் பலி, 270 பேர் காயம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies