65 வயது மூதாட்டி பாலியல் சித்தரவதை - தென்காசி அருகே பயங்கரம்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

65 வயது மூதாட்டி பாலியல் சித்தரவதை – தென்காசி அருகே பயங்கரம்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 03:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 65 வயது மூதாட்டி மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் முயற்சியில் கொலை நடந்ததாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் பழனி ஆண்டவர் கோவிலின் பின்புறம் ஓட்டு வீட்டில் வசித்து 65 வயமு மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார்.

மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள கிராமமான ஆவுடையானூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவ்வபோது மூதாட்டியை அவரது மகன் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

மூதாட்டி முப்புடாதி பீடி சுற்றும் வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூதாட்டி முப்புடாதி மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்ததை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி பர்ணபாஸ், தென்காசி ஏடிஎஸ்பி ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து மூதாட்டி இறந்து கிடந்ததை பார்த்த பொழுது மூதாட்டியின் உடலில் ஆடை இன்றியும் முகத்தை மட்டும் சாணத்திற்குள் திணித்தபடியும் இறந்து கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆடை இன்றி முகம் சாணத்திற்குள் திணிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததால் யாரேனும் மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்று கொலை செய்தனரா? என்கிற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு திப்பணம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் ராமர் (72) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து விசாரனை செய்ததில் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் , மூதாட்டி மறுத்து ஆவேசமாக திட்டியதால் , ஆத்திரத்தில் கொலை செய்து சானம் கொட்டப்பட்ட குழியில் கொண்டு வந்து போட்டதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: ArrestmurderBhavoorchatramTenkasi districtMuthathi Mupputadi
Share
Tweet
SendShare
Previous Post

அரசு டாஸ்மாக் கடையில் மது குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி – குடும்பத்தினர் கதறல்!

Next Post

கென்யாவில் வெடித்து சிதறிய எரிவாயு வாகனம் – 3 பேர் பலி, 270 பேர் காயம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies