திமுக-காங்கிரஸ் செய்த துரோகம் - பட்டியல் போடும் இந்து முன்னணி!
Sep 10, 2026, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக-காங்கிரஸ் செய்த துரோகம் – பட்டியல் போடும் இந்து முன்னணி!

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது சுயநலத்திற்காக பாரதத்தின் இறையாண்மையை, நிலப்பரப்பின் உரிமையை தாரை வார்த்தார்கள். இந்த துரோகிகளுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவின் நிலப்பரப்பை எந்தவிதமான காரணமும் இன்றி மற்ற நாடுகளுக்கு தாரைவார்த்து காங்கிரஸ் தொடர்ந்து துரோகம் செய்து வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்த தேசத்தின் நிலப்பரப்பை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை என்பதே வரலாறு. கடந்த 1947 அக்டோபர் 27 -ல் துவங்கிய இந்தியா – பாகிஸ்தான் போரில் நேருவின் தவறான முடிவால் காஷ்மீரின் பெரும்பகுதி பாகிஸ்தான் வசம் சிக்கிக்கொண்டது.

1951 -ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இருந்த ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருபாரி என்ற இடத்தை ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தார். அதுபோல வங்காளவிரிகுடா கடற்பகுதியில் இருக்கும் கோகோ தீவை பர்மாவிற்கு (மியான்மார்) தாரை வார்த்தார்.

இவற்றை அப்போதைய மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் முதல்வரான பி.சி.ராய் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் இந்தியாவில் பகுதிகளை பிற நாடுகளுக்கு தருவதை கண்டித்ததுடன், இனி இதுபோல் நடைபெறக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974 ஜூன் 24 -ம் தேதி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். அதன்பிறகு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது மேற்கு வங்கத்தில் இருக்கும் தீன்பீகா என்ற தீவை பங்களாதேஷுக்கு தாரை வார்த்தார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தது கம்யூனிஸ்ட்களின் ஆட்சி. இப்படி தொடர்ந்து நிலப்பரப்பை வழங்கி வந்தது காங்கிரஸ் கட்சி.

தவறான அயல்நாட்டு கொள்கையால் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் இந்திரா காந்தி. அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி இந்த சதிக்கு உடந்தையாக செயல்பட்டார்.

இதனை எதிர்த்து பா.ஜ.க.வின் முந்தைய அரசியல் கட்சியான பாரதிய ஜனசங்கத்தின் தமிழக தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாராளுமன்றத்தில் பாரதிய ஜனசங்கத்தின் அவைத் தலைவராக இருந்த வாஜ்பாய் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு குரல் கொடுத்தார். கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைக்குரிய பகுதி என பிரதமராக இருந்த இந்திராகாந்தி குறிப்பிட்டதை கண்டித்தார்.

உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் கேட்ட தகவல்களை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் இந்திரா காந்திக்கு அனுப்பி வழக்கு தள்ளுபடியாக, கருணாநிதி காரணமாக இருந்தார்.

கச்சத்தீவு பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு பல நூறு ஆண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. கச்சத்தீவில் இருந்துதான் இராமேஸ்வரம் இராமநாத சுவாமிக்கு அபிஷேக பால் வந்து கொண்டு இருந்தது. 1968 -ம் ஆண்டு வரை கச்சத்தீவு இராமநாத சமஸ்தானத்திற்கு சொந்தமாக இருந்தது.

அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கவும், தங்கள் வலைகளை உலர்த்தி ஓய்வு எடுத்தும் வந்தார்கள். கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமை இருந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த உடன்படிக்கையில் இருந்த ஆறாவது ஷரத்தை (பிரிவு), இந்திய மீனவர்களுக்கான உரிமையை இந்திரா காந்தி ரகசியமாக நீக்கினார். அப்போது, கருணாநிதி ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க மத்திய அரசை குறைகூற விரும்பவில்லை என பசப்பு நாடகத்தை அரங்கேற்றினார்.

காங்கிரஸ் செய்த துரோகத்தால் பாரதம் இன்று வரை பல இன்னல்களை, பயங்கரவாதிகளின் போதை கடத்தல் கும்பல்களின் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. இந்தியாவை சுற்றி, விட்டுக்கொடுத்த பகுதிகள் மூலமாக சட்ட விரோத ஊடுருவல் நடைபெறுகிறது. அதனை அதிகாரிகள் தடுத்து வருகிறார்கள்.

இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துபோது ஊழல் திமுக அதற்கு உடந்தையாக செயல்பட்டது என்பது மறக்க முடியாத உண்மை.

காங்கிரஸ் பாரதத்தின் நிலப்பரப்பின் உரிமையை விட்டுக் கொடுத்தபோது ஒவ்வொரு முறையும் இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. பாரதத்தின் ஒவ்வொருபிடி மண்ணும் புனிதமானது. இழந்த நிலப்பரப்பை மீட்க வேண்டும் என்று வீரத்துறவி இராம கோபாலன் சபதம் எடுக்க வைத்தார்.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது சுயநலத்திற்காக பாரதத்தின் இறையாண்மையை, நிலப்பரப்பின் உரிமையை தாரை வார்த்தார்கள். இதனை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும்.

எனவே, கச்சதீவை மீட்க வேண்டும் என்பது ஒவ்வொரு தேச பக்தனின் குரல். கண்டிப்பாக, அது நடந்தே தீரும். அதேசமயம் இதுபோல் மீண்டும் நிலப்பரப்பை இழக்காமல் இருக்க சுயநல அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளில் மயங்கக் கூடாது. இந்த பச்சை துரோகிகளுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: The betrayal of DMK-Congress - the list of Hindu Munnani!
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள் – நெல்லையில் பரபரப்பு!

Next Post

சிறையில் இருந்து ஆட்சி செய்ய முடியுமா? முழு விவரம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies