ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி! - அண்ணாமலை விமர்சனம்
Mar 30, 2026, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி! – அண்ணாமலை விமர்சனம்

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெற்றிலைக் காளிப்பாளையம், NGGO காலனி, செங்காளிபாளையம், வெள்ளகினார், நஞ்சைகவுண்டன்பாளையம், உருமாண்டன்பாளையம், விஸ்வநாதபுரம், துடியலூர் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

கடந்த 2014 ஆம் ஆண்டு, நமது நாடு ஊழல் நாடு என்று அழைக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் பாதி, திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாடு, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல், அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி, உண்மையான மக்களாட்சி. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமல், மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள், உலகின் முதன்மை நாடாக நமது நாடு உருவாக இடப்படும் அஸ்திவாரமாக அமையும். நாடு முழுவதும் எழுச்சி அலை வீசுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி.

ஆனால், தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் மாற்றம் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் எப்போதும் இல்லை.

பெண்கள், இளைஞர்கள், அரசியல் வேண்டாம் என்று இருந்தவர்கள் என அனைவரும், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று எழுச்சியுடன் வீதிக்கு வந்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழகத்தில் ஒரு விரல் புரட்சி நடக்கவிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, மக்களை ஏமாற்றி வந்தவர்கள் அனைவரையும், நமது மக்கள் புறக்கணிக்கவிருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகள், ஊழலற்ற நல்லாட்சி வழங்கிய நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடிக்கு, அவரது கடின உழைப்பின் பலனாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் ஒரு முறை 400க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை இருக்க வேண்டும்.

கோவையின் வளர்ச்சிக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, நாடாளுமன்றத்தில் நமது குரலை எதிரொலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும். பாரதப் பிரதமர் கொண்டு வரும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.

கோவை வளர்ச்சி பெற, விவசாயம் செழிக்க, தொழில் துறை முன்னேற, கோவை அடுத்த கட்டத்திற்குச் செல்ல, நமது பாரதப் பிரதமர் அவர்கள் நேரடிப் பார்வையில், நமது கோவை வளர்ச்சி பெற, ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலில், கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணாமலையாகிய என்னை, வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் : பிரதமர் மோடி உறுதி!

Next Post

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை – கிராம மக்கள் சாலை மறியல்!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies