ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி! - அண்ணாமலை விமர்சனம்
Jul 4, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி! – அண்ணாமலை விமர்சனம்

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெற்றிலைக் காளிப்பாளையம், NGGO காலனி, செங்காளிபாளையம், வெள்ளகினார், நஞ்சைகவுண்டன்பாளையம், உருமாண்டன்பாளையம், விஸ்வநாதபுரம், துடியலூர் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

கடந்த 2014 ஆம் ஆண்டு, நமது நாடு ஊழல் நாடு என்று அழைக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் பாதி, திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாடு, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல், அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி, உண்மையான மக்களாட்சி. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமல், மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள், உலகின் முதன்மை நாடாக நமது நாடு உருவாக இடப்படும் அஸ்திவாரமாக அமையும். நாடு முழுவதும் எழுச்சி அலை வீசுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி.

ஆனால், தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் மாற்றம் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் எப்போதும் இல்லை.

பெண்கள், இளைஞர்கள், அரசியல் வேண்டாம் என்று இருந்தவர்கள் என அனைவரும், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று எழுச்சியுடன் வீதிக்கு வந்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழகத்தில் ஒரு விரல் புரட்சி நடக்கவிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, மக்களை ஏமாற்றி வந்தவர்கள் அனைவரையும், நமது மக்கள் புறக்கணிக்கவிருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகள், ஊழலற்ற நல்லாட்சி வழங்கிய நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடிக்கு, அவரது கடின உழைப்பின் பலனாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் ஒரு முறை 400க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை இருக்க வேண்டும்.

கோவையின் வளர்ச்சிக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, நாடாளுமன்றத்தில் நமது குரலை எதிரொலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும். பாரதப் பிரதமர் கொண்டு வரும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.

கோவை வளர்ச்சி பெற, விவசாயம் செழிக்க, தொழில் துறை முன்னேற, கோவை அடுத்த கட்டத்திற்குச் செல்ல, நமது பாரதப் பிரதமர் அவர்கள் நேரடிப் பார்வையில், நமது கோவை வளர்ச்சி பெற, ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலில், கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணாமலையாகிய என்னை, வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் : பிரதமர் மோடி உறுதி!

Next Post

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies