மகளிருக்கான அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும்! - நீலகிரி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்ட எல். முருகன்!
Sep 19, 2026, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிருக்கான அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும்! – நீலகிரி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்ட எல். முருகன்!

Murugesan M by Murugesan M
Apr 15, 2024, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல். முருகன் இன்று வெளியிட்டார். படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்.டி., இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல். முருகன் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு கடந்த 10 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை சொல்லி மக்களிடம் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல். முருகன் இன்று வெளியிட்டுள்ளார்.

‘ஊட்டியில், திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, திரைப்பட நகரம் அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்’ என நீலகிரி தொகுதி பாஜக, வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் வாக்குறுதி அளித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடியின் ‘அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்’ என்கிற உயரிய எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக, ‘தேர்தல் அறிக்கை’ தயார் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு, விவசாயம், இளைஞர் நலன், மகளிர் நலன் மற்றும் எளியோர் நலன் என்று, சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்குமான தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக நமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் சாத்தியமே.
“தாமரையின் மலர்ச்சி..!
நீலகிரியின் வளர்ச்சி..!” எனத் தனது எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

#நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் ‘அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்’ என்கிற உயரிய எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக, ‘தேர்தல் அறிக்கை’ தயார் செய்யப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு, விவசாயம்,… pic.twitter.com/mLniRi3dgJ

— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) April 15, 2024

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* ஊட்டியில் சர்வதேச தரத்தில் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் உருவாக்கப்படும்.
* நீலகிரி மாவட்டத்தில் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்புமின்றி, உலகத் தரத்தில் சுற்றுலா மையம் மற்றும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
* ஊட்டியில் திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, திரைப்பட நகரம் அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்.
* ஊட்டி காந்தல் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.
* மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைவருக்கும் சுகாதாரமான, சுத்தமான குடிநீர் வழங்க ‘ஜல்ஜீவன்’ திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மேட்டுப்பாளையத்தில் மிகப்பெரும் இடையூறாக இருக்கின்ற போக்குவரத்து நெரிசலுக்கு, வெளிவட்ட சாலை அமைத்து தீர்வு காணப்படும்.
* அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகளும், மேட்டுப்பாளையத்தின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகளும் உடனடியாக துவங்கப்படும். * மேட்டுப்பாளையம்-கோவை ரயில் இருப்புப்பாதை இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான ஒருங்கிணைந்த மையம் நிறுவப்படும்.
* அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இத்திட்டத்திற்குள் சேர்க்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
* நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற்று, ஏற்றுமதியை ஊக்குவித்து, உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* மகளிருக்கான அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும்.
* படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்.டி., இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகளின் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்படும்.
* மக்களுக்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி தலைமையில் சேவை செய்ய பொறுப்பேற்க இருக்கும்
* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீலகிரியின் முன்னேற்றத்திற்காக தாமரை சின்னத்தில் ஓட்டளியுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: Government Arts College for girls will be brought! - L. who published the election manifesto for the Nilgiri constituency. Murugan!
Share
Tweet
SendShare
Previous Post

மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

Next Post

நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம்!

Related News

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies