தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை!
Aug 10, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை!

Murugesan M by Murugesan M
Jun 7, 2024, 01:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன முதல் அதிகன மழை பெய்துள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார், தான்தோன்றி மலை, வெண்ணமலை, வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து குளிர்காற்றுடன் கனமழை பெய்தது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதே போல, திருச்சியில் ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை, அண்ணா சிலை, தில்லை நகர், உறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையின் காரணமாக சாலைகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

உதகை, குன்னூர் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி என அனைத்து இடங்களிலும் கனமழை பெய்த நிலையில், நீர் ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காரணமாக கேத்தி பாலாடா, கூக்கல்தொரை, மசக்கல் பகுதியில் பயிரிடப்பட்ட கேரட், வெள்ளை பூண்டு, பீட்ரூட் உள்ளிட்ட மலைக் காய்கறி பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகர்கோவில், தக்கலை, அழகியமண்டபம், மேக்காமண்டபம், மார்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடைவிடாது மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரெட்டிதோப்பு ரயில்வே மேம்பாலப் பகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags: Heavy rain in various parts of Tamil Nadu!
Share
Tweet
SendShare
Previous Post

ஜவர்ஹலால் நேருவின் சாதனையை மோடி முறியடித்து விட்டார்! – அர்ஜுன் சம்பத்

Next Post

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்புகிறோம்!- பிரதமர் மோடி

Related News

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies