திருச்செந்துறை மக்கள் மகிழ்ச்சி! : வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் நிம்மதி!
Sep 15, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்துறை மக்கள் மகிழ்ச்சி! : வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் நிம்மதி!

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி திருச்செந்துறை கிராம பகுதி முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் தங்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இனியாவது திருச்செந்துறை நிலம், கிராம மக்களுக்கு சொந்தமாகுமா ? என்பது குறித்து சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்…!

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருச்செந்துறை கிராமம். காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கிராமத்தில்,
வசிப்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். இதனை பறைசாற்றும் வகையில் இங்கு 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்துக்கள் அதிக வாழும் திருச்செந்துறை கிராமத்தில், நிலங்களை விற்கவோ, வாங்கவோ வேண்டும் என்றால், சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்ப் வாரிய அலுவலகத்தில், ‘ஆட்சேபனை இல்லா சான்றிதழ்’ பெற வேண்டும்,” என்று கடந்த, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுதெரியாமல் திருச்செந்துறை சேர்ந்த ஒருவர் தனது 1.2 ஏக்கர் நிலத்தை விற்க சென்றபோதுதான், இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்தனர். இந்த அறிவிப்பால், தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் குறித்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

அதைத்தொடர்ந்து, திருச்செந்துறை மக்களை அழைத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்தியதை அடுத்து, நிலங்களை பத்திரப் பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் ஏற்பட்ட சிக்கலை குறிப்பிட்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிப் குமார் கூறுகையில், திருச்செந்துறை கிராமத்தில் இனி நிலங்களை வாங்கவும் விற்கவும், பத்திரப்பதிவு செய்யவும் தடை இல்லை என்று தெரிவித்தார்.

திருச்செந்துறை கிராமத்தில் நிலங்களை வாங்கவும் விற்கவும் தடை இல்லை என்ற அறிவிப்பு ஆறுதல் தந்தாலும், இங்குள்ள நிலங்கள் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த மசோதா மூலம் திருச்செந்துறை மக்களுக்கு இனி விடிவு காலம் பிறக்கும் என்கிறார் நில மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா.

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்தத்தை வரவேற்பதாகவும், திருந்செந்துறையில் 25 குடும்பங்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும், பெரும்பாலும் இந்துக்கள் உள்ளபோது, இங்குள்ள நிலங்கள் எப்படி வக்பு வாரியத்திற்கு சொந்தமாகும்? என அக்கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செந்துறை கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக இந்து மக்கள் அதிகளவில் வசித்து வருவதாகவும், இங்கு வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட சொந்தமில்லை என்கிறார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால்.

திருச்செந்துறையில் உள்ள நிலம் யாருக்கு என்ற சர்ச்சை கடந்த 2 ஆண்டுகளாக இருந்த வந்த நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மூலம், நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் திருச்செந்துறை கிராம மக்கள்.

Tags: The people of Thiruchenthurai are happy! : Relief through the Waqf Board Amendment Bill!
Share
Tweet
SendShare
Previous Post

பேருதான் இந்தியா… நாடு இல்ல… ஒலிம்பிக் பிரேக் டான்ஸில் சுவாரஸ்யம்!

Next Post

3.20 லட்சம் பேர் பலி அபாயம்! : மெகா நிலநடுக்க எச்சரிக்கை அச்சத்தில் ஜப்பானியர்கள்!

Related News

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது பவர் கட்; மின்வாரியம் விளக்கம்

தமிழகத்தில் ரூ.11,000 கோடி ரூபாய் முதலீடு; முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies