3.20 லட்சம் பேர் பலி அபாயம்! : மெகா நிலநடுக்க எச்சரிக்கை அச்சத்தில் ஜப்பானியர்கள்!
Jul 12, 2026, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3.20 லட்சம் பேர் பலி அபாயம்! : மெகா நிலநடுக்க எச்சரிக்கை அச்சத்தில் ஜப்பானியர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்று ஜப்பான். அங்கு சராசரியாக ஓராண்டுக்கு ஆயிரத்து 500 முறை நில நடுக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 18 விழுக்காடு ஜப்பானில் மட்டுமே ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இதனால் பலர் உயிரிழக்கும் நிலையும் அவ்வப்போது உண்டாகிறது.
புவித் தகடுகள் ஒன்றோடு ஒன்று உராயும் இடத்தில் அந்நாடு அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

எப்போது வேண்டுமானாலும் நில நடுக்கத்தில் உயிரிழக்க நேரலாம் என்றும், ஆனால் அது இந்த நாளாக இருக்காது என்ற நம்பிக்கையிலுமே ஜப்பானியர்கள் வாழ்வதாகச் சொல்வார்கள்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் கியூஷூ தீவின் கடலோர பகுதியில்
சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 9 மற்றும் 7 புள்ளி ஒன்றாக நில அதிர்வு பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் அந்நாட்டில் பெரும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர்.

அத்தகைய நில நடுக்கம் ஏற்பட்டால் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் என்றும், சுனாமியால் 10 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும் என்றும், ஒன்று புள்ளி ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜப்பான் மக்கள் செய்வதறியாது திகைப்புக்கு ஆளாகியுள்ளனர். 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையில் அதைவிட பல மடங்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

எனவே ஜப்பானில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகள் சொல்வதை கேட்டு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: 3.20 lakh people are at risk of death! : Japanese in fear of mega earthquake warning!
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்துறை மக்கள் மகிழ்ச்சி! : வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் நிம்மதி!

Next Post

கடன் தொல்லையால் தாயே மகளை கொலை செய்த சோகம்!

Related News

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies