சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அவரது வழக்கறிஞர் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை இரு தினங்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையொப்பம் இட வேண்டும்.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். இந்நிலையில், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜியுடன் வந்திருந்த வழக்கறிஞர் தானும் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், செந்தில் பாலாஜி மட்டும் உள்ளே செல்ல அனுமதித்து, வழக்கறிஞரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வெளியே அனுப்பினர்.