20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் கிராமத்தில் பிறந்த முதல் செல்லக் குழந்தை - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் கிராமத்தில் பிறந்த முதல் செல்லக் குழந்தை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடும்பத்தின் செல்லப் பிள்ளை என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம். ஒரு கிராமத்துக்கே ஒரு செல்லப் பிள்ளை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?
யார் அந்த செல்லப் பிள்ளை? எந்த நாட்டில் எந்த கிராமத்தில் வளர்கிறது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

குழந்தையின் பிறப்பு என்பது குடும்ப வாழ்க்கைக்கான கடவுள் தந்த பரிசாகும். அதுவும் விலைமதிப்பற்ற பரிசாகும். குழந்தை பிறப்பு, குடும்பத்துக்காக புது வரவு மட்டுமல்ல, குடும்பத்தின் மகிழ்ச்சியான நிகழ்வாகும். அதுவும் ஜப்பானில், குழந்தை பிறப்பு என்பது கூடுதல் மகிழ்ச்சியான தருணமாகும்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் அதிக அளவில் குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட 32 சதவீத ஆண்களும், 24 சதவீத பெண்களும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1970ம் ஆண்டில் நடந்த திருமணங்களின் எண்ணிக்கையில் 40 சதவீதம் குறைந்திருக்கிறது.

2022ம் ஆண்டில், ஜப்பானில் 800,000 க்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளன. மேலும் ஜப்பான் பழங்குடி மக்கள் தொகை 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. ஜப்பான் மக்கள் தொகையில், அபாய கட்டத்தில் இருப்பதாக எச்சரித்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் ஒரு சமூகமாக தொடர்ந்து செயல்பட முடியுமா? என்ற ஐயத்தையும் எழுப்பியிருக்கிறார்.

ஜப்பானின் ஒசாகாவின் வடக்கே உள்ள ஒரு சிறிய கிராமம்தான் இச்சினோனோ. இச்சினோனோ ஜப்பானின் மக்கள்தொகை இல்லாத ‘பொம்மை கிராமங்களில்’ ஒன்றாகும்.

மொத்தமே இந்த சிறிய கிராமத்தில் 53 பேர் வாழ்கின்றனர். அதிலும் பெரும்பாலானோர் 65 வயதை கடந்த முதியவர்களாவர். கிராமவாசிகள் பெரும்பாலோருக்குப் பிள்ளைகள் உண்டு என்றாலும் படிப்பு காரணமாக நகரத்துக்குச் சென்றவர்கள் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பவே இல்லை.

வெறுமையைப் போக்க கிராமவாசிகள் பொம்மைகளை நம்பி இருக்கின்றனர் . அவரவர் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் பொம்மைகளை வைத்துள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கிராமத்தில் பிறந்த முதல் குழந்தை கேட்டோ தான்.
அதனால், தற்போது இரண்டு வயதாகும் குரானோசுகே கேட்டோ (Kuranosuke Kato), இச்சினோனோ கிராமத்துக்கே செல்லப் பிள்ளையாக வளர்கிறான் . குரானோசுகே கேட்டோவை கிராம மக்கள் தங்கள் பிள்ளையாகவே பார்க்கிறார்கள்.

கிராம மக்கள் அவரவர் வீட்டில் சமைத்த உணவைக் கொண்டு வந்து குரானோசுகே கேட்டோவுக்கு ஊட்டி விடுகிறார்கள். குறுநடை போடும் இந்த குழந்தை தங்கள் பெருமை என்று பெருமிதத்துடன் கூறுகிறார், 74 வயதான கிராமத் தலைவர் சவயாமா பீம்ஸ்.

33 வயதான ரை கேட்டோ மற்றும் 31 வயதான தோஷிகி கேட்டோ ஆகியோர் 2021 ஆம் ஆண்டில், பெரிய நகரமான ஒசாகாவிலிருந்து இச்சினோனோ கிராமத்துக்குக் குடிபெயர்ந்தனர்.

தங்கள் மகன் இந்த கிராமத்தில் பிறந்ததே சாதனை தான் என்று சொல்லும் பெற்றோர், எந்த சாதனையும் செய்யாமலேயே, ஊர் மக்களால் குரானோசுகே கேட்டோ போற்றப்படுவதாகவும், என்று, பெரியவர்களின் அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையால் வளர்க்கப் படுவதாகவும் கூறுகின்றனர்.

ஜப்பான் பிரதமர் இஷிபா அழிந்துவரும் கிராமங்களை மேம்படுத்த மானியங்களை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்து இளைய ஜப்பானை மீண்டும் உருவாக்க உறுதியளித்துள்ளார்.

என்றாலும், குரானோசுகே கேட்டோவுக்கு சம வயதுடைய குழந்தைகள் விளையாட இல்லாதது ஒரு குறையாகவே உள்ளது .

Tags: japanJapan's birth rateOsakaKuranosuke Kato
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை – சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் ஏற்ற தீவிர நடவடிக்கை!

Next Post

பெண்களை மதிக்காத தலிபானுக்கு சர்வதேச அங்கீகாரம்? – சிறப்பு கட்டுரை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies