திருச்சியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!
Mar 22, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மருங்காபுரியை சேர்ந்த கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். கே.கே.நகர் அருகே ஓலையூர் ரிங் ரோடு பகுதியில், உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி இருவரும் பணியாற்றி வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கலாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஓலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: trichyelectricity boardeb contract labours diedMarungapurihigh-voltage tower
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் விவகாரம் – நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies