சாட்டையடி போராட்டம் : பின்னணியும், முக்கியத்துவமும் - சிறப்பு தொகுப்பு!
May 19, 2025, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாட்டையடி போராட்டம் : பின்னணியும், முக்கியத்துவமும் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 28, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தன்னை தானே வருத்திக்கொள்ளும் இந்த சாட்டையடி போராட்டம் ஏன்?, தமிழர்களின் ஆன்மிக கலாச்சாரத்தோடு தொடர்புடைய சாட்டையடியின் பலன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது என்பது இந்து மரபில் தொடக்கம் முதலே வழக்கமாக இருந்து வருகிறது. அங்க பிரதட்சனம் செய்வது, முடி காணிக்கை அளிப்பது, பால் குடம் எடுப்பது, காவடி சுமப்பது என்பவை அதில் அடக்கம்.

இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று பல பக்தர்கள் தங்களை தாங்களே வருத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நடைமுறையும் இருந்து வருகிறது. அலகு குத்திக்கொள்வது, தீ மிதிப்பது, ஆணியால் செய்யப்பட்ட காலணிகளை அணிந்தபடி நடப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, கத்தி போட்டுக்கொள்வது உள்ளிட்டவை கடுமையான நேர்த்திக்கடன்களாக கருதப்படுகின்றன.

அந்த வகையில், குறிப்பிட்ட வேண்டுதலை நிறைவேற்றக்கோரி சாட்டையால் அடித்துக்கொள்ளும் வழக்கமும் பல கோயில்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டல கோயில்களில் இத்தகைய நேர்த்திக்கடன்களை அதிகம் காணலாம்.

கோவை பூசாாிப்பாளையத்தில் உள்ள அடைக்கலம்மன் கோயிலில் நடைபெறும் சாட்டையடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மழை வேண்டி சாட்டையடி வழிபாடு நடைபெறும். இதில் பங்கேற்கும் பக்தர்கள், கோயில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி வழிபாடு நடத்துவர்.

அதேபோல் மணப்பாறை அருகே உள்ள முண்டிப்பட்டி சென்னப்பன் மகாலட்சுமி காவேரி அம்மன் கோயிலில் குறும்பர் இன மக்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இப்படி, சாட்டையால் அடித்துகொள்வது தமிழர்களின் முக்கியமான வழிபாட்டு முறையாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகதான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துகொண்டுள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக தனக்கும் தனது குடும்பத்திற்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடுமையான நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படும். ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வரும் அவலங்கள் நீங்க வேண்டும் என்ற பொதுநோக்கத்திற்காக அண்ணாமலை தன்னைதானே வருத்திக்கொண்டுள்ளதாக அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

மேலும், தன்னைதானே வருத்திக்கொள்வது என்பது காந்தியின் சத்தியாகிரக போராட்ட வழிமுறைகளில் ஒன்றாகும். முக்கியமான காலக்கட்டங்களில் எல்லாம் ஒரேஒரு ஆயுதத்தை மட்டும்தான் காந்தி உயர்த்தி பிடித்துள்ளார். அது, தன்னை தானே வருத்திக்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம்.

அதன்மூலம் தனது கோரிக்கையையும், தனது நிலைப்பாட்டின் தீவிரத்தையும் அவர் அனைவருக்கும் புரிய வைத்தார். எனவே, அண்ணாமலையின் இந்த சாட்டையடி போராட்டத்தை காந்தியின் அகிம்சை வழி சார்ந்த போராட்டமாகவும் சிலர் கருதுகின்றனர்.

Tags: DMKAnna Universitytamilnadu governmentchennai policeAnna University campusstudent sexual assaultannamalai sattayiyadi demo
ShareTweetSendShare
Previous Post

மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு – புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயர்வு!

Next Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் – முழு விவரம்!

Related News

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies