பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
Aug 4, 2025, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

Web Desk by Web Desk
Dec 29, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து கேட்டார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம்  வன்மையாக கண்டிக்கத்தக்கது.  . பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்று  வருகிறது..  திமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்காக பெரிய சபதத்தை எடுத்து அறுபடை வீடுகளுக்கு செல்வதாக அறிவித்திருக்கிறார்..அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.

குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முறையான விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே நாள் விசாரணையில், ஒருவர் தான் குற்றவாளி என இல்லாமல் முழுமையாக நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்..

FIR வெளியானது அவமானப்படக் கூடிய விஷயம்.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்கிற பேச்சே இல்லை. எங்கு சென்றாலும் கஞ்சா புழக்கம் உள்ளது.  நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததே  பிரதமர் மோடி தான்.அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு திருமாவளவன் போராட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும்.

அந்த குற்றவாளி  பல குற்றங்கள் செய்து இருக்கிறார். அவர் திமுக நிர்வாகி என்று சொல்கிறார்கள் அது பற்றி விசாரிக்க வேண்டும். அந்த குற்றவாளி என்னென்ன பதவிகளில் இருந்துள்ளார் யாருடன் எல்லாம் புகைப்படம் எடுத்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அதனை திமுகவினர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மற்ற வழக்குகள் போல இல்லாமல் சிறப்பு வழக்காக விசாரிக்க வேண்டும்.  இல்லையென்றால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய மனதில் குரல் நிகழ்ச்சியில் Creative economy பற்றி பிரதமர் மிக விளக்கமாக பேசினார். சினிமா, gaming, மீடியா துறைகள் எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் துறையாக உள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.

மக்கள் பங்களிப்புடன் மிகப்பெரிய மாற்றத்தை சுற்றுச்சூழல் மூலமாக உருவாக்க வேண்டும் என்றும்,   மலேரியா ஒழிப்பு முன்னேற்பாடு, பொதுமக்கள் செய்யும் தலை சிறந்த பணி போன்ற பல விஷயங்களை மனதின் குரல் மூலம் பிரதமர் எடுத்துக் சொல்லியுள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

Tags: Anna Universitytamilnadu governmentchennai policethirumavalavanAnna University campusstudent sexual assaultPM ModiL MuruganannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு!

Next Post

மெல்போர்ன் டெஸ்ட் : ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை!

Related News

கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை  அமைத்த இஸ்ரோ!

மாணவர்களை தாக்கிய ஆசிரம ஊழியர்கள் : கண்ணீருடன் மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா, ஜோதிகா சுவாமி தரிசனம்!

கூலி பட டிரைலர் யூடியூப்பில் ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் சுவாமி தரிசனம்!

கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூல்!

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் போதும் – இளையராஜா

தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

கன்னியாகுமரி : ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று விபத்து – 3 பேர் காயம்!

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்த தண்ணீர் : அலறிய எச்சரிக்கை மணி!

பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜப்பானில் தைவான் கலை கண்காட்சி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies