பயிர் கடன் தள்ளுபடி எப்போது? : விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என அண்ணாமலை கேள்வி!
Oct 20, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிர் கடன் தள்ளுபடி எப்போது? : விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என்றும்,பயிர் கடன் எப்போது தள்ளுபடி செய்யப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் திமுக அரசு உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து, முதலமைச்சரும், அமைச்சர்களும், ஆளுக்கொரு சதவீதத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு வேலைவாய்ப்பின்மை என பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம் என  அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி எண் 33 ஆக, சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக
கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் திரு. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை. சிறு குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும், வாங்கிய கடனை விவசாயிகள் குறித்த காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் ஆணவமாகப் பேசியதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இத்தனைக்கும், கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலின்போதே. பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியிருந்தது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா? எனறும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசின் சாதனையாக, ஆட்சிக்கு வந்து, கடந்த 07.05.2021 முதல், 31.12.2023 வரை, ரூ.35,852.48 கோடி கூட்டுறவு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில், புயல், வெள்ளம் என, சிறு குறு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம் என அவர் கூறியுள்ளார்.

அப்படி இருந்தும், கடந்த 31.03.2024 வரை நிலுவையில் இருக்கும் கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.19,008 கோடி மட்டும்தான் எனில், இத்தனை கடினமான காலங்களிலும், சிறு குறு விவசாயிகள் தங்கள் கடனை முறையாகத் திரும்பச் செலுத்தி வருகிறார்கள் என்பதுதானே பொருள் திமுகவின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது திமுக என அவர் தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். திமுகவின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி. நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு. குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Tags: annamalaitamilnadu governmentDMK regimeTamil Nadu BJP State President AnnamalaiDMK's intention is to cheat farmerscrop loans waived issuefalse promises
ShareTweetSendShare
Previous Post

திருநெல்வேலி : சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் சிப்காட் தொழிற்சாலை!

Next Post

திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர் : தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு!

Related News

தொடரும் சீரமைப்பு பணி – உதகை மலை ரயில் 2வது நாளாக ரத்து!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

திமுக எனும் அரக்கனை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – எல்.முருகன் உறுதி!

தீபாவளி பண்டிகை – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் ஆதரவு நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கடும் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி – ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

ஹிந்துக்களை அவமிதிக்கும் வகையில் தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி – இந்து முன்னணி கண்டனம்

உலகின் மிகப் பெரிய இராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பில் சீனா – சிறப்பு தொகுப்பு !

திக்…திக்..பக்..பக்.. : சிதிலமடைந்த குடியிருப்புகள் – திகிலுடன் வாழும் மக்கள்!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம் – 7000 கோடிக்கு பட்டாசு விற்பனை!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொடிவேரி அணை மூடல்!

தீபாவளி சிறந்த சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies