பிரேசிலில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
சவோ பாலோ நகரில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பாரா பாண்டா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்துக்குள்ளான பகுதியில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.