ஆம் ஆத்மி ஆட்சி இழக்க ஐந்து காரணங்கள்!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆம் ஆத்மி ஆட்சி இழக்க ஐந்து காரணங்கள்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2025, 05:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி, இம்முறை மக்களின் ஆதரவை பெறத் தவறியதற்கு ஐந்து காரணங்கள் முக்கியமானதாக முன்வைக்கப்படுகின்றன.

ஊழலை ஒளிப்பேன் என்ற வாக்குறுதியுடன் 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனல், 2015ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 10 ஆண்டுகள் டெல்லியை அவர் ஆட்சி செய்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு உட்பட பல்வேறு முறைகேடு புகார்கள் ஆம் ஆத்மி அரசு மீது முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக ஆம் ஆத்மி அரசு மீதான மதிப்பு டெல்லி மக்களிடையே படிப்படியாக குறைந்தது.

இரண்டாவதாக தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் புதிதாக சொகுசு பங்களாவை கெஜ்ரிவால் கட்டிக் கொண்ட விவகாரமும் டெல்லி மக்களிடையே அதிருப்தியை அதிகரித்தது. அரசு பங்களா, கார் உள்ளிட்ட எந்த வசதிகளையும் பயன்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியை கெஜ்ரிவால் பின்பற்றாமல், சொகுசு பங்களாவை கட்டிக் கொண்ட விவகாரத்தை எதிர்க்கட்சியான பாஜக சிறப்பான முறையில் பரப்புரையில் முன்வைத்தது.

துணை நிலை ஆளுநர் உடனான நிர்வாக ரீதியான முரண்பாடுகளை சுட்டிக் காட்டி, தனது அரசால் வளர்ச்சித் திட்டங்களை டெல்லி மக்களுக்கு கொடுக்க முடியவில்லை என மக்கள் மத்தியில் குறிப்பிட்டார் கெஜ்ரிவால்…. ஆனால், இதனையும் டெல்லி மக்கள் ஏற்கவில்லை. மாறாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் நிர்வாக திறமையின்மையை தான் இது காட்டுவதாக அமைந்தது….

இலவச மின்சாரம், குடிநீர், பேருந்து போன்ற திட்டங்களை ஆம் ஆத்மி அரசு முன்னெடுத்தாலும், சுகாதாரமான குடிநீர், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி அரசால் வழங்க முடியவில்லை. இதுவும் ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகி இருக்கிறது.

2025ஆம் ஆண்டுக்குள் யமுனை ஆற்றை சுத்தப்படுத்துவேன் எனக் கூறி வாக்குறுதி அளித்த கெஜ்ரிவால், அதனை நிறைவேற்ற முடியாத காரணத்தால், யமுனை நதியில் விஷம் கலக்கப்பட்டதாக அண்டை மாநில அரசுகளை மையப்படுத்தி குற்றம்சாட்டினார். இதுவும் டெல்லி மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மீதான நன்மதிப்பை குறைத்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Tags: aam aadmi party2025 delhi electionFive reasons for Aam Aadmi Party to lose power!
Share
Tweet
SendShare
Previous Post

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால்

Next Post

உ.பி. இடைத்தேர்தல் – பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies