சிங்கப்பூர் சென்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மனைவி மற்றும் மகனுடன் நாடு திரும்பினார்.
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர், சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார். இதன் காரணமாக, தனது விசாகப்பட்டினம் பயணத்தை ரத்து செய்துவிட்டு, மகனை பார்ப்பதற்காக சிங்கப்பூருக்கு பவன் கல்யாண் சென்றார்.
மகனின் சிகிச்சை முடிந்து சிங்கப்பூரில் இருந்து மனைவி மற்றும் மகனுடன் பவன் கல்யாண் ஹைதராபாத் திரும்பினார். விமான நிலையத்தில் மனைவி, மகனுடன் பவன் கல்யாண் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.