வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் - கைவிட்ட தமிழக அரசு!
Sep 2, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் – கைவிட்ட தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 08:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெஞ்சல் புயல் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கும், படகுகளுக்கும் வழங்கப்பட வேண்டிய தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. வாடகைத் தொகையை எட்டுமாதமாக வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசின் மீது மீனவ மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தின் வடமாவட்டங்களை உருக்குலைத்த பெஞ்சல்புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களில் நீங்காத துயரத்தை ஏற்படுத்தியது. பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் புயலில் சிக்கிக் கொண்டிருந்த போது மீட்புப் பணிகளின் ஒருபகுதியாகச் செயல்பட்ட மீனவர்களுக்கும்,  அவர்கள் இயக்கிய படகுகளுக்கும் வழங்க வேண்டிய தொகை தற்போதுவரை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

மழை, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பதற்காக மீனவர்களின் உதவியை நாடிய தமிழக அரசு, அவர்களிடமிருந்தே நூற்றுக்கும் அதிகமான படகுகளையும் வாடகைக்கு எடுத்து இயக்கியது. அதன் ஒருபகுதியாகச் சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 40க்கும் அதிகமான பைபர் படகுகள் சென்னை மாநகராட்சி மற்றும் மீன்வளத்துறை சார்பாக வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தப்பட்டன.

பைபர் படகுக்கு நான்காயிரம் ரூபாயும், அவற்றை இயக்க இரு நபர்களுக்கு தலா ஆயிரத்தி முந்நூறு ரூபாயும் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், பெஞ்சல் புயல் கடந்து எட்டு மாதங்களாகியும் அத்தொகை வழங்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

மீட்புப் பணியின் போது உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராத மீன்வளத்துறை, தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையைக் கேட்டால் நாள்தோறும் அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  பொதுமக்களை ஆபத்துக்காலத்தில் மீட்ட தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தைக் கூட வழங்க மறுப்பது வேதனையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், ,டிசம்பர் மாதங்களில் பெய்யும் பருவமழையால் ஏற்படும் பாதிப்பின் போது பொதுமக்களை மீட்கும் பணியைச் செய்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் அலைக்கழித்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தினரை விட்டுவிட்டு பொதுமக்களைக் காக்கச் சென்ற தங்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லாததோடு, படகை எடுத்துச் சென்ற செலவு தான் மிச்சம் எனவும் மீனவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அண்மையில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது நிதி நெருக்கடியில் அவசர நிலையா எனத் தமிழக அரசைப் பார்த்து நீதிபதிகள் எழுப்பிய கேள்வியை மேலும் உறுதியாக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

தங்களின் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாத்த மீனவர்களுக்கு  வழங்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: தமிழக அரசுDelay in paying rent: Fishermen who helped in the storm - abandoned by the Tamil Nadu governmentபுயலில் உதவிய மீனவர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Next Post

உலகளவில் ட்ரெண்டாகும் கூமாப்பட்டி!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies