டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!
Sep 2, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

Murugesan M by Murugesan M
Jul 13, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டையே உலுக்கிய கோவைக் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் என்ற டெய்லர் ராஜா 29 ஆண்டுகளுக்கு பின்பு தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷாவின் வலது கரமாக இருந்த டெய்லர் ராஜா சிக்கியது எப்படி ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

பிப்ரவரி 14, 1998…. கோவை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக தலைவர் எல்.கே. அத்வானி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தன.

அத்வானி பங்கேற்க இருந்த மேடைக்கு அருகே முதல் குண்டு வெடிக்கத் தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து 14 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டுகளைத் தயாரித்த 6 பேர் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் அடுத்தடுத்து 102 பேர் கைது செய்யப்பட்டனர்.

குண்டு வெடிப்பு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே மத்திய உள்துறை அலுவலகத்திலிருந்து வந்த எச்சரிக்கை ஒன்றில் இஸ்லாமியப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் அல் உம்மா இயக்கத்தினர் கோவையில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தும் அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசு அலட்சியமாக இருந்ததன் விளைவே இத்தனை உயிர்கள் பறிபோனதற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

கோவை குண்டுவெடிப்பு நடைபெற்ற இரண்டு மணிநேரத்திற்குள் அல் உம்மா இயக்கமும், அகில இந்திய ஜிஹாத் கமிட்டி இயக்கமும் மாநில அரசால் தடை செய்யப்பட்டது. அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா மற்றும் அவருடன் இருந்த 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இஸ்லாமியப் பாதுகாப்புப் படை என்ற இயக்கத்தைச் சேர்ந்த அலி அப்துல்லா என்பவர் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புகளிலும் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதற்கிடையில் மற்றொரு முக்கிய குற்றவாளியான கோவை தெற்கு உக்கடம் பிலால் காலனியைச் சேர்ந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா தலைமறைவாகவே இருந்து வந்தார்

இந்த நிலையில் நீண்ட நாட்களாகச் சிக்காமல் இருக்கும் தீவிரவாதிகளை கண்டறியும் முயற்சியின் ஒருபகுதியாகத் தமிழகக் காவல்துறை, ஆப்ரேஷன் அறம் மற்றும் ஆப்ரேஷன் அகழி எனும் பெயரில் உளவுத்துறையின் மூலம் ரகசிய ஆப்ரேஷனை மேற்கொண்டது.

அதற்காக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவின் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளுடன் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை தமிழகக் காவல்துறை கைது செய்தது.

இளமைக்கால புகைப்படத்தை மட்டுமே கொண்டு நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்போடு ஆந்திரா மாநிலத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி அபுபக்கரைப் பிடிக்க முற்பட்டபோது மற்றொரு பயங்கரவாதியான முகமது அலியும் சிக்கினார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் அல் உம்மா அமைப்பின் பயங்கராவதிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரையும் கைது செய்ய உதவியாக இருந்த ஆப்ரேசன் அறத்தின் தொடர்ச்சியாக ஆப்ரேசன் அகழி எனும் பெயரில் கோவைக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சாதிக் என்ற டெய்லர் ராஜாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி அளித்த தகவலின் அடிப்படையில் கர்நாடக மாநிலம் விஜய்புராவில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவைத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

1990களில் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய சாதிக் என்ற டெய்லர் ராஜா கோவையில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் தலைமறைவானார். அல் உம்மா பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்கு முன்பு தையல் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு டெய்லர் ராஜா என்ற பெயரும் இருந்துள்ளது. அதோடு, ஷாஜகான் மஜீத் மகாண்டர், ஷாஜகான் சைக் எனும் பெயர்களைப் பயன்படுத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வெடிப்பு, ஜெயிலர் பூபாலன் கொலை என அடுத்தடுத்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு  அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷாவின் வலதுகரமாக வலம்வந்த டெய்லர் ராஜா கோவையிலேயே வீடு எடுத்துத் தங்கி அங்கேயே குண்டு வெடிப்புகளுக்குத் தேவையான வெடிகுண்டுகளைத் தயாரித்து விநியோகித்து வந்துள்ளார். வெடி மருந்துகளைக் கையாள்வதிலும், அதனை வெடிகுண்டாக தயாரிப்பதிலும் கைதேர்ந்தவரான சாதிக் என்ற டெய்லர் ராகா அதர்காக காஷ்மீர் வரை சென்று அங்குள்ள தீவிரவாத அமைப்புகளிடம் பயிற்சி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷாவின் வலதுகரமாக இருந்து கோவைக் குண்டு வெடிப்புக்குப் பின் தலைமறைவான டெய்லர் ராஜா, இரண்டாவது திருமணம் செய்து மூன்று குழந்தைகளுடன் கர்நாடகாவில் சுமார் 15 ஆண்டுகள் வசித்து வந்துள்ளார்.

தனக்கும் குண்டுவெடிப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததைப் போல விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்த டெய்லர் ராஜாவை, மத்திய உளவு அமைப்புகளின் உதவியோடு தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: How was Taylor Raja caught?: A major twist in the Coimbatore blast caseடெய்லர் ராஜா சிக்கியது எப்படி?கோவை குண்டுவெடிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு – அரசுப்பேருந்து விபத்து!

Next Post

வார விடுமுறை – குடமுழுக்கு நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies