உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!
Apr 29, 2026, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக பாம்புகள் தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் அவசியம் குறித்து விளக்குவதற்கும் தமிழக வனத்துறை இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கியுள்ளது. பாம்புகள் அதிகளவு உள்ள மாநிலங்களில் முதன்மையாக மாநிலமாகத் திகழும் தமிழகத்தில் பாம்புகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியக் கலாச்சாரத்தில் இலக்கியங்கள், சொல்லாடல்கள், கதைகள், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும் உயிரினங்களில் ஒன்று பாம்பு. இந்தியாவில் நாக வழிபாடு என்பது பல பண்பாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இத்தகைய பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பாம்புகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்ற  விழாவில் பாம்பு மீட்பாளர்களுக்கான செயல்திறன் பயிற்சியும் வழங்கப்பட்டது.

நாட்டிலேயே அதிக பல்லுயிர் தன்மை கொண்ட மாநிலங்களில் முதன்மையானதாக மட்டுமின்றி அதிக பாம்பு வகைகளைக் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. நகரவாசிகளுக்குப் பாம்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், அவை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாலும் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு அதிகரித்து வருகிறது.

பாம்புக் கடி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததன் விளைவே இந்தியாவில் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார் பாம்புகள் குறித்து நீண்ட ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவரும் சாந்தகுமார்.

பாம்பு கடித்துவிட்டால் பதட்டப்படுவதும், இறுக்கி கயிறுகளால் கட்டுவதும் தவறான நடைமுறை எனப் பாம்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

திரைப்படங்களைப் பார்த்து பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து ரத்தத்தை உறிவது போன்ற தவறான முறையைக் கையாள்வதே கை, கால்களை இழக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனிவரும் காலங்களில் பாம்புகளுடன் மனிதர்களும் சேர்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு நண்பனாகச் செயல்படும் பாம்புகளின் அவசியம் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: World Snake Day: Snake bite deaths on the rise due to lack of awarenessஅதிகரிக்கும் பாம்பு கடி பலிஉலக பாம்புகள் தினம்today உலக பாம்புகள் தினம்
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Next Post

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies