சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு - பிற நாடுகளுக்கு ஆபத்தா?
Jun 14, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்தடுத்து சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கா, சீனாவில் உள்ள தனது நாட்டு மக்களைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. என்ன நடக்கிறது சீனாவில்? விரிவாகப் பார்க்கலாம்.

சீனாவில் அண்மைக் காலமாக சிக்குன்குனியா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சிக்குன்குனியா வைரஸ் ஒன்றும் புதியதல்ல என்றாலும், சீனாவில் திடீரென அதன் பரவல் அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3,000 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது உண்மையில் அஞ்சத்தக்க எண்ணிக்கையாகும். எனவே, போர்க்கால அடிப்படையில் சீன அரசு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சீனாவில் உள்ள போஷன் நகரம் சிக்குன்குனியா பாதிப்பின் மையமாகக் கருதப்படுகிறது. அதேபோல, குவாங்டாங் மாகாணத்தில் 12 நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சீனா முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்கள் வளர ஏதுவாக தங்களது வீடுகளைத் தூய்மையற்ற முறையில் வைத்துள்ளவர்களுக்கு, இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

பல பகுதிகளில் சிக்குன்குனியால் பாதிக்கப்பட்டவர்கள், கோவிட் காலத்தைப் போலவே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். காய்ச்சல், மூட்டு வலி, அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கா, சீனாவில் உள்ள தனது நாட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், கூடுமானவரை உரிய தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா-வுக்கு பிறகு சீனாவில் ஏதேனும் வைரஸ் வேகமாகப் பரவ தொடங்கினால், அது உலக நாடுகளைத்தான் முதலில் கலக்கமடையச் செய்யும். கொரோனா வைரஸ் கற்றுக் கொடுத்த பாடம் அப்படி.

Tags: china news todayChikungunya spreads rapidly in China 10000 people infected so far Is it a danger to other countries?சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா
ShareTweetSendShare
Previous Post

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Next Post

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies