மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!
May 2, 2026, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Aug 15, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துக்கு அளித்த முக்கிய நிதி உறுதிமொழிகளை மீண்டும்  நிறைவேற்றத்  தவறிவிட்டது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் நாடுகளில் முதல் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.1989 முதல் 35 ஆண்டுகளில், 28 ஆண்டுகள் IMF-யிடம் அந்நாடு கடன்களைப் பெற்றுள்ளது.

மேலும், IMF-ன்  திட்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காமலும்  செயல்படுத்தாமலும் மிக மோசமான நடந்துவருகிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில், 4 சர்வதேச நாணய நிதியத் திட்டங்களைப் பாகிஸ்தான் முறையாகக் கடைப் பிடித்திருந்தாலே, மீண்டும் மீண்டும் கடனுக்காக  அந்நாடு கையேந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

பாகிஸ்தான் அரசு கொள்கைகளில், ராணுவத்தின் ஆழமான தலையீடு காரணமாகவே அந்நாட்டில்  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  IMF வழங்கும் கடன் நிதியை,  எல்லை தாண்டிய பயங்கர வாதச்  செயல்களுக்கே பாகிஸ்தான் பயன்படுத்திவருகிறது என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

வரும் செப்டம்பர் மாதத்தில், பாகிஸ்தானின் செயல்திறனை  IMF மதிப்பாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.   இந்த மதிப்பீட்டைப் பொறுத்து, அடுத்த கட்ட தவணையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி கிடைக்கும்.

பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட  நிதி செயல்பாட்டு அறிக்கையின்படி, IMF-ன் 5 முக்கிய நிபந்தனைகளில், 3-ஐ பாகிஸ்தான் அடையத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தனது மாகாண அரசுகள் 1.2 டிரில்லியன் ரூபாய் சேமிக்கும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் வெறும் 921 பில்லியன் ரூபாயை மட்டுமே பாகிஸ்தானால் சேமிக்க முடிந்தது. இதில் மட்டும் 280 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, IMF நிர்ணயித்த முக்கிய நிபந்தனையான 12.3 டிரில்லியன் ரூபாய்  வருவாய் வசூல் என்ற  இலக்கையும் பாகிஸ்தான்  அடையத் தவறியுள்ளது. வரி அடிப்படையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியான  தாஜிர் தோஸ்த் திட்டத்தின் கீழ் சிறு சில்லறை வணிகர்களிடமிருந்து  50 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கும் இலக்கையும்  பாகிஸ்தான் முற்றிலுமாக நிறைவேற்றவில்லை.

இந்தச் சூழலில், நிதிப் பற்றாக்குறை மற்றும் முதன்மை உபரி வருவாயில் முன்னேற்றத்தைக் காட்டி IMF-ஐ நம்ப வைக்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

ஏற்கெனவே சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித் தடம் தொடர்பான நிபந்தனைகளைப் பாகிஸ்தான்  நிறைவேற்றத் தவறியதால், 500 மில்லியன் கடன் வழங்கும் திட்டத்தை உலக வங்கி ரத்து செய்துள்ளது.மேலும், புதியதாக உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், IMF-ன்  கடனுதவியைப் பெறுவதிலும் பாகிஸ்தானுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags: தவறிய பாகிஸ்தான்india vs pakistanIMFpakistan news todayTrouble looms again: Pakistan fails to fulfill IMF conditions
ShareTweetSendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

Related News

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies