மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!
Aug 13, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Aug 15, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துக்கு அளித்த முக்கிய நிதி உறுதிமொழிகளை மீண்டும்  நிறைவேற்றத்  தவறிவிட்டது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் நாடுகளில் முதல் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.1989 முதல் 35 ஆண்டுகளில், 28 ஆண்டுகள் IMF-யிடம் அந்நாடு கடன்களைப் பெற்றுள்ளது.

மேலும், IMF-ன்  திட்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காமலும்  செயல்படுத்தாமலும் மிக மோசமான நடந்துவருகிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில், 4 சர்வதேச நாணய நிதியத் திட்டங்களைப் பாகிஸ்தான் முறையாகக் கடைப் பிடித்திருந்தாலே, மீண்டும் மீண்டும் கடனுக்காக  அந்நாடு கையேந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

பாகிஸ்தான் அரசு கொள்கைகளில், ராணுவத்தின் ஆழமான தலையீடு காரணமாகவே அந்நாட்டில்  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  IMF வழங்கும் கடன் நிதியை,  எல்லை தாண்டிய பயங்கர வாதச்  செயல்களுக்கே பாகிஸ்தான் பயன்படுத்திவருகிறது என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

வரும் செப்டம்பர் மாதத்தில், பாகிஸ்தானின் செயல்திறனை  IMF மதிப்பாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.   இந்த மதிப்பீட்டைப் பொறுத்து, அடுத்த கட்ட தவணையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி கிடைக்கும்.

பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட  நிதி செயல்பாட்டு அறிக்கையின்படி, IMF-ன் 5 முக்கிய நிபந்தனைகளில், 3-ஐ பாகிஸ்தான் அடையத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தனது மாகாண அரசுகள் 1.2 டிரில்லியன் ரூபாய் சேமிக்கும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் வெறும் 921 பில்லியன் ரூபாயை மட்டுமே பாகிஸ்தானால் சேமிக்க முடிந்தது. இதில் மட்டும் 280 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, IMF நிர்ணயித்த முக்கிய நிபந்தனையான 12.3 டிரில்லியன் ரூபாய்  வருவாய் வசூல் என்ற  இலக்கையும் பாகிஸ்தான்  அடையத் தவறியுள்ளது. வரி அடிப்படையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியான  தாஜிர் தோஸ்த் திட்டத்தின் கீழ் சிறு சில்லறை வணிகர்களிடமிருந்து  50 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கும் இலக்கையும்  பாகிஸ்தான் முற்றிலுமாக நிறைவேற்றவில்லை.

இந்தச் சூழலில், நிதிப் பற்றாக்குறை மற்றும் முதன்மை உபரி வருவாயில் முன்னேற்றத்தைக் காட்டி IMF-ஐ நம்ப வைக்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

ஏற்கெனவே சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித் தடம் தொடர்பான நிபந்தனைகளைப் பாகிஸ்தான்  நிறைவேற்றத் தவறியதால், 500 மில்லியன் கடன் வழங்கும் திட்டத்தை உலக வங்கி ரத்து செய்துள்ளது.மேலும், புதியதாக உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், IMF-ன்  கடனுதவியைப் பெறுவதிலும் பாகிஸ்தானுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags: தவறிய பாகிஸ்தான்india vs pakistanIMFpakistan news todayTrouble looms again: Pakistan fails to fulfill IMF conditions
Share
Tweet
SendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies