தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!
Aug 24, 2025, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த ஆண்டின் பருவமழை காலத்தில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்களால் இமாச்சல பிரதேச மாநிலம் கடுமையாக உருக்குலைந்துள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.

இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்புகள் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, மாபெரும் இயற்கை சீற்றமாக மாறியது. குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட 36 மேக வெடிப்புகள், 74 திடீர் வெள்ளம் மற்றும் 63 நிலச்சரிவுகள், 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியதோடு, அங்குள்ள உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட 16 மேக வெடிப்புகள் ஏற்பட்டு அங்குப் பேரழிவை ஏற்படுத்தியது.

இந்த இயற்கை சீற்றத்தால் அம்மாநிலத்தில் இதுவரை 35 பேர் வரை உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பேரழிவின் மையமாக உள்ள மண்டி மாவட்டத்தில் மட்டும் 17 பேர் மேக வெடிப்பாலும், 18 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அண்மையில் குல்லு மற்றும் மண்டி மாவட்டத்தின் மாணிகரன் பகுதியிலும் திடீர் மேக வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவு பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெரும் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. மாநில அரசின் மதிப்பீட்டின் படி இதுவரை ஏற்பட்ட இழப்பின் அளவு 2 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் தொடர் மழைப்பொழிவு நிலவி வருவதால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துமீறிய கட்டுமானங்கள், காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவையே இந்த இயற்கை சீற்றங்கள் வேகமாகவும், அடிக்கடியும் ஏற்படக் காரணமாக இருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிப்படையக்கூடிய பகுதியான இமாச்சலில், நான்கு வழிச்சாலை பணிகள், சுரங்கப்பாதை அமைத்தல் போன்ற பணிகள் மீட்டெடுக்க முடியாத சேதத்தை ஏற்படுத்துவதாகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான ஓ.பி.புரைட்டா எடுத்துரைத்திருக்கிறார்.

கடல்கள் சூடாவதாலும், அதிகரிக்கும் காற்றின் வெப்பநிலையாலும், இனி வருங்காலங்களில் மழைப்பொழிவு மேலும் தீவிரமடையும் என மற்றொரு சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌம்யா தத்தா எச்சரித்திருக்கிறார். இயற்கையுடனான மனித தலையீட்டைக் குறைப்பதே இந்த பேரழிவுகளைத் தடுக்க ஒரே வழி என்றும் அவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

சுற்றுச்சூழல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில், கட்டுப்பாடற்ற வளர்ச்சி எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை, இந்த பேரழிவு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: floodHimachal Pradesh devastated by series of weather disturbances: Environmentalists reveal shocking backgroundஇமாச்சல பிரதேச மாநிலம்
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

Next Post

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies