தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!
Jun 22, 2026, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த ஆண்டின் பருவமழை காலத்தில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்களால் இமாச்சல பிரதேச மாநிலம் கடுமையாக உருக்குலைந்துள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.

இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்புகள் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, மாபெரும் இயற்கை சீற்றமாக மாறியது. குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட 36 மேக வெடிப்புகள், 74 திடீர் வெள்ளம் மற்றும் 63 நிலச்சரிவுகள், 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியதோடு, அங்குள்ள உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட 16 மேக வெடிப்புகள் ஏற்பட்டு அங்குப் பேரழிவை ஏற்படுத்தியது.

இந்த இயற்கை சீற்றத்தால் அம்மாநிலத்தில் இதுவரை 35 பேர் வரை உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பேரழிவின் மையமாக உள்ள மண்டி மாவட்டத்தில் மட்டும் 17 பேர் மேக வெடிப்பாலும், 18 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அண்மையில் குல்லு மற்றும் மண்டி மாவட்டத்தின் மாணிகரன் பகுதியிலும் திடீர் மேக வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவு பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெரும் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. மாநில அரசின் மதிப்பீட்டின் படி இதுவரை ஏற்பட்ட இழப்பின் அளவு 2 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் தொடர் மழைப்பொழிவு நிலவி வருவதால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துமீறிய கட்டுமானங்கள், காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவையே இந்த இயற்கை சீற்றங்கள் வேகமாகவும், அடிக்கடியும் ஏற்படக் காரணமாக இருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிப்படையக்கூடிய பகுதியான இமாச்சலில், நான்கு வழிச்சாலை பணிகள், சுரங்கப்பாதை அமைத்தல் போன்ற பணிகள் மீட்டெடுக்க முடியாத சேதத்தை ஏற்படுத்துவதாகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான ஓ.பி.புரைட்டா எடுத்துரைத்திருக்கிறார்.

கடல்கள் சூடாவதாலும், அதிகரிக்கும் காற்றின் வெப்பநிலையாலும், இனி வருங்காலங்களில் மழைப்பொழிவு மேலும் தீவிரமடையும் என மற்றொரு சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌம்யா தத்தா எச்சரித்திருக்கிறார். இயற்கையுடனான மனித தலையீட்டைக் குறைப்பதே இந்த பேரழிவுகளைத் தடுக்க ஒரே வழி என்றும் அவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

சுற்றுச்சூழல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில், கட்டுப்பாடற்ற வளர்ச்சி எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை, இந்த பேரழிவு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: floodHimachal Pradesh devastated by series of weather disturbances: Environmentalists reveal shocking backgroundஇமாச்சல பிரதேச மாநிலம்
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

Next Post

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies