‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் : தலைவர்கள் புகழாரம்!
Jun 12, 2026, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் : தலைவர்கள் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,  மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ்நாட்டில் மதமாற்றங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெற்று, இந்து மதத்தின் காவலராக திகழ்ந்த கவிஞர், பாடகர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட, இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி அமரர் திரு. ராமகோபாலன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று! பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓடவைத்த பெருமைக்குரியவர்.

தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கொலைமுயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தவர். பெண்களே சக்தியின் வடிவம் எனக் கருதியதுடன், திருவிளக்கு பூஜையின் வழியாக ஹிந்து பெண்களை ஒருங்கிணைத்தவர். இன்றைய தினத்தில், வீரத்துறவி அமரர்  ராமகோபாலன் ஜி அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்! என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவரும், இந்து சமுதாய மக்களுக்காக ஓயாது குரல் கொடுத்தவருமான ‘வீரத்துறவி’ இராமகோபாலன் அய்யா அவர்களின் பிறந்த தினம் இன்று.

தனது தொடக்க காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர சேவகராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பை நிறுவியதன் மூலம், இந்து சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற பணிகளை இடையறாது மேற்கொண்டார்.

1982-ஆம் ஆண்டில், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக குரல் கொடுத்த அய்யா இராமகோபாலன் அவர்கள், கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் பாதுகாப்பதை தனது பெரும் கடமையெனக் கருதி செய்து வந்தார்.

தமிழகம் முழுவதும் இன்றளவும் மிகுந்த வரவேற்போடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறுவதற்கு வித்திட்டவர் அய்யா அவர்கள். சித்தாந்த வேறுபாடுகளின்றி, தமிழகத்தின் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட ‘வீரத்துறவி’ இராமகோபாலன் அய்யா அவர்களின் பிறந்த தினத்தில், அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்வோம்..! என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தேசப்பணிக்கும், தெய்வப்பணிக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த, இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் அமரர் திரு. ராமகோபாலன் அவர்களது பிறந்த தினம் இன்று.

இந்து ஒற்றுமை மாநாடுகளை நடத்தி இந்து மக்களுக்கு இடையிலான சாதிய நிலைகளைக் களையச் செய்தவர். இந்து மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த மாமனிதர்.

விவேகானந்தர் வழிநடந்த வீரத்துறவி ஐயா திரு. ராமகோபாலன் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Nainar Nagendran'Veerathuravi' Ramagopalan's birthday today: L. MuruganAnnamalai wish him well‘வீரத்துறவி’ இராமகோபாலன்
ShareTweetSendShare
Previous Post

சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!

Next Post

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

Related News

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies