டாடா டிரஸ்டில் அதிகார மோதல் - என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?
Aug 6, 2026, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாடா அறக்கட்டளை தலைவராக இருந்த ரத்தன் டாடா இருந்த காலத்தில், டாடா சன்ஸ் குழுமத்துடன் இணக்கமான சூழல் இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர், டாடா அறக்கட்டளையில் வெடித்த அதிகார மோதல், தற்போது பூதாகரமாகியுள்ளது. அதைப் பற்றித் தற்போது பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான டாடா குழுமம், உப்பு முதல் விமானங்கள் வரை பல்வேறு வகையான தொழில்களை மேற்கொண்டு வருகிறது. டாடா குழுமத்தின் மதிப்பு 27 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அக்குழுமத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மோதல் வெடித்துள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவிகித பங்குகளை சொந்தமாகக் கொண்டு, நாட்டின் மதிப்புமிக்க நிறுவனமாக டாடா டிரஸ்ட்ஸ் செல்வாக்கை பெற்றுள்ளது. தற்போது இரண்டு பிரிவு அறங்காவலர்களுக்கு இடையேயான அதிகார மோதல் காரணமாக டாடா டிரஸ்ட்ஸ் வாரியம் வரும் 10ம் தேதி கூடவுள்ளது.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு பின்னர், 2024 அக்டோபர் 11ம் தேதியன்று டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார், அவரது சகோதரரான நோயல் டாடா… அப்போது முதல் டாடாஸ் சன்ஸ் குழுமத்தில், டாடா டிரஸ்ட்டால் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள் வழங்கும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாதது குறித்து அறங்காவலர்கள் குழு அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நோயல் டாடாவால், ரத்தன் டாடா போன்று அதிகாரத்தை ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும், சக அறங்காவலர்களிடம் இருந்து அதிருப்தியையும், விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக அறங்காவலர்களிடம் கலந்து ஆலோசிக்காமல், நோயல் நேரடியாக முடிவெடுப்பது டாடா டிரஸ்ட்ஸ் வாரியத்திற்குள் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருத்து வேறுபாடுகளின் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், அண்மையில் மும்பையில் உள்ள தாஜ் சேம்பர்ஸில் அறங்காவலர்களை சந்தித்து விரிவாக ஆலோசித்ததாக அறியப்படுகிறது. இந்தப் பின்னணியில், டாடா டிரஸ்ட்ஸ் வாரியம் அக்டோபர் 10 ஆம் தேதி கூடுகிறது.

அதில் நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பங்குச் சந்தைப் தொடர்பான விவகாரத்தில் அறங்காவல் குழுவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. டாடா அறக்கட்டளைகளின் ஒருங்கிணைப்பு நீண்ட காலமாக டாடா குழுமத்தின் ஸ்திரத்தன்மைக்கு அடித்தளமாக இருந்து வருகிறது.

இதில் சிறிதளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், குழுவில் உள்ள 26 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் பாதிக்கும் என்ற வாதங்களும் எழாமல் இல்லை… ஒழுங்குமுறை கோரிக்கைகள், குழு உத்தி மற்றும் குடும்ப உறவுகளைச் சமநிலைப்படுத்தும் ஒரு ஒத்திசைவான நிலைப்பாட்டைச் சுற்றி நோயல் டாடா, அறங்காவலர்களை ஒன்றிணைக்க முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்படும் நிலையில், அதற்கான விடை விரைவில் தெரியவரும்.

Tags: டாடா சன்ஸ்tataரத்தன் டாடாPower struggle in Tata Trusts - What is happening in the Tata Group?டாடா அறக்கட்டளை
Share
Tweet
SendShare
Previous Post

15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!

Next Post

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies