கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?
Sep 10, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 21, 2025, 07:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் கூறியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. இந்தச் சூழலை இந்தியாவின் பிரச்னையாகக் கருதாமல், தனது சொந்த பிரச்னையாகக் கனடா பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது…

2023ஆம் ஆண்டில் காலிஸ்தான் குழுக்களை கனடா கையாள்வது குறித்த இந்தியாவின் விமர்சனத்தை அந்நாட்டின் அப்போதைய பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்தார். மேலும், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மீது ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த ஆண்டில் தொடக்கத்தில் கொலை, பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் கனடா போலீசார் அபத்தமான குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதன் காரணமாக ஆறு தூதர்களை கனடா வெளியேற்ற, இந்தியாவும் எதிர்வினையாற்றியது. இந்தியாவும் கனடாவும் உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், கனடாவின் குற்றச்சாட்டுகளை தினேஷ் பட்நாயக் நிராகரித்தார்.

இந்தியா ஆதாரங்களுக்காகக் காத்திருப்பதாகக் கூறிய அவர், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தினார். CTV உடனான ஒரு நேர்காணலின்போது, ஒரு தூதருக்கே பாதுகாப்பு தேவைப்படும் சூழல்தான் கனடாவில் உள்ளதாகக் கூறிய அவர், இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வை கனடா வழங்கவில்லை என்று குறைகூறினார்.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியர்களை பிரச்னையாக பார்க்ககூடாது என்றும், கனடாவைச் சேர்ந்த சிலர் பிரிவினையை ஏற்படுத்த சர்ச்சையை கிளப்புவதாகவும் இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் தெரிவித்தார். மேலும் கனடாவில் காலிஸ்தான் சமூகத்தினர் குறிவைக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளிக்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்திய தூதர், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

கனடாவில் காலிஸ்தான் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியது உள்நாட்டுக்கான சவால் என்று கூறிய இந்திய தூதர், ஒட்டாவாவிற்கும், புதுடெல்லிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முழு பாதுகாப்பு சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

காலிஸ்தான் அச்சுறுத்தலால், கனடாவில் ஒரு உயர் ஆணையர் பாதுகாப்புடன் இருக்கவேண்டியது தனக்கு விசித்திரமாக உள்ளது என்று அவர் கூறினார்.இதற்கிடையே, இந்திய தூதர்கள் கனடாவுக்குத் திரும்புவது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துமா என்று கனட அமைச்சர் கேரி ஆனந்த சங்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார். கனடா நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையானதை நாங்கள் செய்வோம் என்று மட்டும் அவர் கூறினார். பாதுகாப்பு ஒத்துழைப்பு பரஸ்பரமானது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கும் இந்திய தூதர், கனடாவிலிருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Indians are not safe in Canada: What does the Indian ambassador say?இந்திய தூதர்கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை
Share
Tweet
SendShare
Previous Post

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

Next Post

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies